districts

குடோனில் கொள்ளை: இந்து மக்கள் கட்சி நிர்வாகி உட்பட 13 பேர் கைது

கோவை, ஆக.11- கோவையில் நள்ளிரவில் 2 பேரை கட்டிப்போட்டு இரும்பு குடோனில் புகுந்து ரூ.18.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்ற இந்து மக்கள் கட்சி நிர்வாகி  உட்பட 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவை குண்டம், கருங்குளத்தை சேர்ந்தவர் முத்தையா (51). இவர் சிங்காநல் லூர், வெள்ளலூர் சாலை, உலக நாயக்கர் தோட்டம் அருகே தனது சகோதரருடன் இரும்பு குடோன் நடத்தி வருகிறார். அவர்கள் நிலத் தின் உரிமையாளருக்கு ரூ.50 லட்சம் கொடுத்திருப்பதாகவும், இடத்தை காலி செய்வதில் அவர்களுக்கிடையே மோதல் இருந்து வந்ததாக கூறப் படுகிறது. இந்நிலையில், வியாழ னன்று இரவு குடோனை பூட்டி விட்டு முத்தையா, ஊழியர் பேச்சிமுத்து என் பவருடன் குடோனில் இருந்துள்ளார். அப்போது நள்ளிரவில் 13 பேர் கொண்ட கும்பல் குடோனின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங் குள்ள அறையில் இருவரையும் கட் டிப்போட்டு, செல்போனை பிடுங்கி கொண்டனர். தொடர்ந்து அந்த கும் பல் குடோனில் இருந்த ரூ.18 லட்சம் மதிப்பில் 6 டன் எடையுடைய பழைய செம்பு, பித்தளை, அலுமினியம் மற் றும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பீரோ, பிரிட்ஜ், வாசிங் மெஷின், எல்இடி டிவி, கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை கொள்ளையடித்து டிராக்டர் மற்றும் 2 ஈச்சர் லாரிகளில் ஏற்றினர். இதன் பின் முத்தையா, பேச்சிமுத்துவிடம் விரைவில் இங்கிருந்து காலி செய் யும் படி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக சிங்கா நல்லூர் காவல் நிலையத்தில் புகார ளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். அதில், குடோனுக்குள் அத்துமீறி நுழைந்து  ரூ.18.50 லட்சம் மதிப்பிலான பொருட் களை கொள்ளையடித்து சென்றது சிங்காநல்லூர், எஸ்ஐஎச்எஸ் காலனி அருள்முருகன் நகரைச் சேர்ந்த இந்து  மக்கள் கட்சி நிர்வாகி பிரபு (எ) காலனி பிரபு (36), தாராபுரத்தைச் சேர்ந்த கண் ணன் (30), திருச்சியைச் சேர்ந்த அஜ் மத், மதுரையைச் சேர்ந்த வீரபாரதி (21), பென்னி (19), மனோஜ்குமார் (19), வீரையா (27), 16 வயது சிறு வன், பிரபு (24), சங்கர் கணேஷ் (24), முகேஷ் (22), பார்த்தசாரதி (19), ராம நாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பால முருகன் (26) ஆகிய 13 பேரை போலீ சார் கைது செய்தனர். குடோனை காலி செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை யில் இந்த சம்பவம் நடைபெற்றிருக் கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதானவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள் ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.