districts

img

கேள்வி கேட்டால் சிறை என்பது அறிவுக்கு எதிரான செயல்பாடாகும்

தருமபுரி, ஜூன் 29- கேள்வி கேட்டதால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இத்தகைய செயல்  என்பது அறிவுக்கு எதிரான செயல்பாடு ஆகும் என தருமபுரி புத்தக திருவிழா கருத் தரங்கில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உரையாற்றினார். தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத் தகப்பேரவை, பாரதி புத்தகாலயம் சார்பில் தருமபுரி அரசுகலைக்கல்லூரி மைதானத் தில் புத்தகத்திருவிழா நடைபெற்று வருகி றது. இதில், திங்களன்று நடைபெற்ற கருத்த ரங்கில், ‘வாசிப்புப் பண்பாடு’ என்கிற தலைப் பில் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் பேசியதா வது, பண்பாட்டில் அறிவியலும் சேர வேண் டும். 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்‌ ஆப்பி ரிக்காவில் இருந்து மனிதர்கள் இந்தியா விற்குள் வந்தனர். சிந்து சமவெளி பகுதி யில் வந்து குடியேறினர். இன்னொரு பகுதி யினர் ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தனர். சிந்து சமவெளிப் பகுதியில் இருந்து வந்தவர்கள் தான் ஆரியர்கள், இவர்கள் எல்லாம் கலந்தது தான் இந்திய சமூகம். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் உணவு கிடைக்காமல் இந்தியாவிற்குள் வந்த னர். வடக்கே இருக்கும் இந்தியர்கள் வெள் ளையாகவும், தெற்கே உள்ளவர்கள் கருப் பாகாவும் இருப்பார்கள்.

எல்லா சாதியிலும் எல்லா மதத்திலும் கலப்பு உண்டு. எல்லாம் கலந்த சமூகம் தான்‌ இந்தியா. கலப்பில்லாத மதம், சாதி  என்று எதுவுமே சொல்ல முடியாது. கல்வியில் அரசியல் இருக்கிறது. மனப்பாடக்கல்வியில் தேர்வு வைக்கும்போது, ஒரு குறிப்பிட்ட சமூக மாணவர்களே வெற்றி பெற முடிகி றது. உழைக்கின்ற மக்களின் குழந்தைக ளுக்கு மனப்பாடம் செய்யும் திறன் குறைவு.  மந்திரம் ஓதுபவர்களுக்கு மனப்பாடத்திறன் இருக்கும். எனவே, மனப்பாடக்கல்வி இல்லா மல், புரிந்து படிக்கவேண்டும். கேள்விகளை உருவாக்கும் இடம்தான்‌ அறிவு. கேள்வி கேட் டால் சிறையில் தள்ளக்கூடாது. கேள்வி கேட் டதால் பல அறிஞர்கள் சிறையில் தள்ளப் பட்டனர். இச்செயல், அறிவுக்கு எதிரான செயல்பாடாகும். கேள்விகளை கேட்டு வர வேற்கிற சமூகம் தான் வளரும். அதிகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால் தான், உலகத்தையும் சமூகத்தையும் புரிந்து கொள்ள முடியும். கல்வி என்பது வகுப்பறை யில் மட்டுமே கற்பது அல்ல, சமூகத்திலும் கல்வியை கற்கிறோம். புத்தகத்தை வாசிக்க வாசிக்க அறிவு பெருகும். உலகையும், சுதந் திரத்தை புரிந்துகொள்ள புத்தக வாசிப்பு அவசியம். புத்தக வாசிப்பை பண்பாடாக மாற்ற வேண்டும். இவ்வாறு ச.தமிழ்செல் வன் பேசினார். இதில், தகடூர் புத்தகப் பேரவைத் தலை வர் இரா.சிசுபாலன், செயலாளர் இரா.செந் தில், ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, ஆசிரி யர் மா.பழனி, கவிஞர் ஆதிமுதல்வன், பேரா சிரியர்கள் சீனிவாசன், இ.பி.பெருமாள் உட் பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செய லாளர் சேதுராமனின் “மந்திரமா?, தந்தி ரமா?” என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதன்பின் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பெரியார் பல்கலைக்கழக முது நிலை ஆராய்ச்சி மைய மாணவ, மாணவிய ரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.