districts

img

மகளிர் உரிமைத்தொகை: அரசியல் தலையீடு இருக்காது

கோவை, ஜூலை 19- மகளிர் உரிமைத்தொகை வழங்கு வதில், அரசியல் தலையீடு இருக் காது என்றும், வெளிப்படைத் தன்மை யுடன் விண்ணப்பங்கள் வாங்கப்படும் என்றும் கோவை  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மக ளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பெற சிறப்பு முகாம் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் 11  லட்சத்து 43 ஆயிரத்து 824 குடும்ப அட் டைகள் பயன்பாட்டில் உள்ளன. ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம்  தேதி வரை முதற்கட்டமாக முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 500 குடும்ப அட் டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என நிய மிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளன. வியாழனன்று (இன்று) முதல் குடும்ப அட்டைதாரர் எப்போது வரவேண்டும் என்ற டோக்கன் வழங்கப் படும். முதல் 2 நாட்கள் காலை 30 பேர், பிற்பகல் 30 பேர் என விண்ணப்பம் செல் போன் செயலி மூலம் வழங்கப்பட உள் ளது. அதன்பின் காலையில் 40 பேர்,  மாலையில் 40 பேர் என விண்ணப்பங் கள் பெறப்படும். கடைகளுக்கு வர பொதுமக்கள் அவசர பட வேண்டாம். எப் போது வர வேண்டும் என்பதை ரேசன் கடை ஊழியர்கள் தெரிவிப்பார்கள். என் னென்ன கொண்டு வர வேண்டும் என் பதும் தெரிவிக்கப்படும். முகாமுக்கு ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்த கம், மின்சார பில் போன்றவை கொண்டு  வர வேண்டும். ஆதார் அட்டையுடன் இணைக்கப் பட்ட செல்போன் எண் கொண்டு வந் தால், 5 நிமிடத்தில் வேலை முடிந்து விடும். பொதுமக்களுக்கு தேதி, நேரம் கொடுக்கப்படும். அந்த தேதியில் வர  முடியவில்லை எனில் அதற்கு மாற்று  தேதிகள் வழங்கப்படும். பழங்குடியி னர் வசிக்கும் பகுதிகளில் வனத்துறை உதவியுடன் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் பெறப்படும். குடும்ப  அட்டை, ஆதார் இல்லை எனில் அதற்கு தனியாக பதிவு செய்யப்பட்டு, இல்லாத ஆவணங்களை பெற நடவடிக்கை எடுக் கப்படும். இருகட்டமாக சிறப்பு முகாம் நடத்தப்படுவது கூட்டத்தை கட்டுப் படுத்ததான். விண்ணப்பம் வழங்குவ தும், பெறுவதும் வெளிப்படைத் தன்மை யுடன் நடைபெறும். அரசியல் தலையீடு இருக்காது. இவ்வாறு கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.