districts

நூல் விலையில் மாற்றமில்லை: எனினும் பனியன் தொழில் மந்தம்

திருப்பூர், ஆக.1- திருப்பூர் பின்னலாடை உற்பத் திக்கு மூலப்பொருளாக பயன்படும் பருத்தி நூல் விலை கடந்த மாதத்தின் விலையிலேயே தொடரும் என்று  நூற்பாலைகள் தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. நூல் விலை உயராமல் தொடர்ந்தாலும் எதிர்பார்த்த ஆர்டர் கள் இல்லாததால் உற்பத்தி மந்த நிலையில் நீடிப்பதாக தொழில் துறை யினர் தெரிவிக்கின்றனர். பின்னலாடை தயாரிப்புக்கு பருத்தி நூலில் குறிப்பிட்ட ரகங்கள் பயன்ப டுத்தப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி பின்னலாடை விலைகளைத் தீர்மா னிப்பதில் மூலப்பொருளான பருத்தி நூல் விலை முக்கிய பங்கு வகிக்கி றது. கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு நூல் விலை உயர்ந்ததால்  திருப்பூர் பின்னலாடை உற்பத்தித் தொழில் ஏற்றுமதி, உள்நாட்டுப் பிரிவு என இரண்டிலும் கடும் பாதிப்பு ஏற் பட்டது. குறிப்பாக, சிறு, குறு, நடுத்த ரத் தொழில் பிரிவினர் ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வந்த நிலையில், நூல் விலை உயர் வும் சேர்ந்து நிலை குலைந்து போயி னர். அதேசமயம் நூல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை  தொழில் துறையினரின் நிரந்தரக் கோரிக்கையாக உள்ளது. தாறுமா றான ஏற்ற, இறக்கம் இல்லாமல் சீரான விலையில் குறிப்பிட்ட காலத் திற்கு நிலையாக இருந்தால்தான் பின் னலாடைத் தொழில் இயல்பாக நடை பெற முடியும் என்று பல்வேறு தொழில் அமைப்புகளும் கூறி வருகின்றன.  பின்னலாடை நூல் விலையைப் பொறுத்தவரை மாதந்தோறும் முதல்  தேதியில் அந்த மாதத்திற்கான விலையை நூற்பாலைகள் அறிவிப் பார்கள். சமீப மாதங்களாக நூல் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை குறைந்தது. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான விலை 1ஆம் தேதி செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த மாதத்தின் விலையே தொடரும், எந்த மாற்றமும் இல்லை  என்று நூற்பாலைகள் அறிவித்துள் ளன. கடந்த ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்தது. அதைத் தொடர்ந்து ஐந்து மாதங்களாக நூல் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரே விலை நீடித்தது. கடந்த மாதம் விலை குறைக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் நூல் விலை குறையக் கூடும் என்று தொழில் துறையினர் எதிர் பார்த்தனர். எனினும் கடந்த மாதம் விலையே இப்போதும் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலை கடந்த ஆண்டை ஒப் பிடும்போது குறைந்திருந்தாலும் கூட, சந்தை நிலவரம் சாதகமாக இல்லை. அமெரிக்க, ஐரோப்பிய  யூனியன் சந்தைகளில் மக்களின் வாங் கும் சக்தி குறைந்து போயுள்ளது. இத னால் இங்கு வர வேண்டிய ஆர்டர் கள் அளவு குறைந்துள்ளது. எனவே உற்பத்தி குறைந்து உள்ளது. இந்த  நிலையில் நூல் விலை குறைந்தாலும் அதை பயன்படுத்த முடியாத சூழ் நிலை இருப்பதாக ஏற்றுமதியாளர் கள் தரப்பில் தெரிவித்தனர். உள் நாட்டு சந்தையிலும் தொய்வான நிலையை உள்ளது. இதனால் உள் நாட்டு உற்பத்தி பிரிவிலும் குறிப்பிடத் தக்க எந்த முன்னேற்றமும் காண வில்லை என்று உற்பத்தியாளர்கள் கூறினர்.