districts

img

கோவிலில் கைவரிசை: நகை, பணம் திருட்டு

கோவை, நவ.20- சூலூர் அருகே வீடு  மற்றும் கோவிலில் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை  கொள்ளையடித்துச் சென்ற  சம்பவம், அப்பகுதி மக் களை பீதியில் ஆழ்த்தியுள் ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செங்கத் துறை ஊர் மைதானம் அருகே மாகாளியம்மன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் ஞாயிறன்று பூஜைகள் முடிந்து வழக்கம் போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், காலையில் கோவிலை திறக்க வந்த போது, கோவிலின் கதவு  உடைக்கப்பட்டிருந்தது. மேலும், அம்மன்  கழுத்தில் இருந்த தங்கத் தாலி மற்றும் அம்மனுக்கு சாத்தப்படும் வெள்ளி கிரீடம் 5 கிலோ ஆகியவையும் திருடு போயி ருந்தது தெரியவந்தது.  அதுமட்டுமின்றி, இதே கோவிலின் அரு கிலேயே இருந்த சுப்பாத்தாள் என்பவரது வீட்டிலும் அடையாளம் தெரியாத நபர் கள் புகுந்து, வீட்டின் பீரோவில் இருந்த  பத்தாயிரம் ரூபாயை திருடிச் சென்றுள் ளனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார், கோயி லில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவு களை ஆய்வு செய்தனர். அதில் இரு  நபர்கள் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு திருடியது பதிவாகி இருந்தது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார், தடயவியல் துறையினர் உதவியுடன் கோவில் வளாகத்தில்  கைரே கைகளை பதிவு செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அடையா ளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே  மாகாளியம்மன் கோவிலில் கொள்ளை  சம்பவம் நடந்தேறிய நிலையில் மீண்டும்  தற்போது நகைகள் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.