districts

img

அங்கன்வாடி மையத்தில் திருட்டு

திருப்பூர், ஏப்.22-  திருப்பூரில் அங்கன்வாடி மையத்தில் கேஸ் அடுப்பு, சிலிண்டர் மற்றும் சமைய லுக்கு தேவையான மளிகை பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. திருப்பூர் பெரியார் காலனி பகுதியில் உள்ள சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் 40க்கும் மேற் பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வரு கின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அங்கன்வாடி மையத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த கேஸ் அடுப்பு, சிலிண்டர், முட்டை, அரிசி உள்ளிட்ட மளிகை சாமான் கள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்த கூடிய பாத்திரங்கள் அனைத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து வெள்ளி யன்று காலை அங்கன்வாடி ஊழியர்கள் மையத்தை திறந்து பார்த்தபோது பொருட் கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த னர்.  உடனே, அனுப்பர்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத் தில் விசாரணை மேற்கொண்டனர். இரவு மர்ம ஆசாமிகள் சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் திருடிச் சென்றதன் காரணமாக வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு உணவு சமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகிலுள்ள மற்றொரு அங்கன்வாடியில் உணவு சமைத்து மாணவ மாணவிகளுக்காக கொண்டு வரும் ஏற்பாடுகள் செய்தனர்.