districts

img

பெதப்பம்பட்டியில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு

திருப்பூர், நவ. 8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன்றி யக்குழு சார்பில் தீக்கதிர் நாளிதழ் சந்தா ஒப்படைப்பு சிறப்பு  பேரவை நவம்பர் புரட்சி தினமான செவ்வாயன்று பெதப்பம் பட்டியில் நடைபெற்றது. தோழர் எம்.ராஜகோபால் தோட்டத்தில் நடைபெற்ற இப்பேரவை கூட்டத்திற்கு ஜி.வெங்கடேஷ் தலைமை  ஏற்றார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் 14 தீக்கதிர் சந்தாவுக்கு உரிய தொகை ரூ.27ஆயி ரத்து 50-ஐ பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். கட்சியின்  குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா, ஓய்வு  பெற்ற ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சி.ஜெயப்பிரகா சம் ஆகியோர் உரையாற்றினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஏ.தங்கவடிவேல், எஸ்.மோகனசுந்தரம், ஆர்.கலை வாணி, சி.ஜெ.ஸ்ரீதர் உள்பட கட்சி அணியினர் திரளானோர்  கலந்து கொண்டனர். நிறைவாக ஆறுமுகம் நன்றி கூறி னார்.