உடுமலை, ஜன.6- மின் மீட்டர் பற்றாக்குறையால் புதிய மின் இனைப்பு தர காலதாமதம் ஏற்படுவது குறித்தும், இதனால் மக்கள் படும் அவதிகள் குறித்தும் தீக்கதிர் நாளிதழில் கடந்த 3 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து மின் மீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. உடுமலை பகுதியில் புதிய வீடு கட்ட தற்காலிக மின் இனைப்புகள் கேட்டு அதற்கான முழு தொகையைச் செலுத்தி யவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக மின் இனைப்பு வழங்கப்படாமல் இருந்தது. மேலும், மின் இனைப்பு காலதாம தற்கு காரணம் கேட்டால், வாரியத்தில் மின் மீட்டர் பற்றாக் குறை என்று பதில் அளித்தனர். புதிய வீடு கட்ட அவசர தேவை களுக்கு அருகில் உள்ள வீடுகளில் மின்சாரம் எடுத்தால் மின் ஊழியர்கள் அபராதம் செலுத்தச் சொல்வது குறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதிய மின் இனைப்பு கேட்டு கடந்த மாதம் 28 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்தவர்களுக்கு இனைப்பு வழங்க புதிய மின் மீட்டர் வழங்கப்பட்டு உள்ளது.