ஈரோடு, மார்ச் 13- எழுமாத்தூர் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காண ஒப்புதல் அளிக்கப்பட்டதால், வாலிபர் சங் கத்தின் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட் டத்திற்குட்பட்டது எழுமாத்தூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் பொன்விழா நகர் கால னிப் பகுதியில், குடிநீர் பிரச்சனை இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இப்பிரச் சனையை தீர்க்கக்கோரி பல மனுக்கள், முறையீடுகள் செய்யப்பட்டும், இதுவரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், எழுமாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் முன்பாக, காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சிக்கப்பட்டது. அப்போது, ஊராட்சி மன்ற அலுவலர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் தலையிட்டு, வாலிபர் சங்க தலை வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஒரு வார காலத்திற்குள் பிரச்ச னைக்கு தீர்வுகாணப்படும் என எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டம் ஒத்திவைக் கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், வாலிபர் சங்க கிளைச் செயலாளர் பிரசாந்த், மாவட்டப் பொருளாளர் லோகநா தன், சிபிஎம் ஊராட்சி மன்ற உறுப்பினர் டி.தங்கவேல், தாலுகா கமிட்டி உறுப்பினர் சசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.