சேலம், செப்.4- சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், காந்தி நக ரில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் மதுப்பிரியர்கள், மது அருந்திவிட்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி யாகி உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மதுக்கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றியப் பொருளாளர் கார்த்தி தலைமை வகித்தார். இதில், ஒன்றியச் செயலாளர் என்.கண்ணன், முன் னாள் ஒன்றியச் செயலாளர் கே.சுரேஷ், விவசாய தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.சாமியப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கே.குமார், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.