districts

ஒன்றிய மோடி அரசிற்கு எதிராக கிளர்தெழுந்த தொழிலாளர் வர்க்கம்

திருப்பூர், மார்ச் 28- ஒன்றிய மோடி அரசிற்கு எதிராக வேலை நிறுத்தம், மறியல் உள்ளிட்ட போராட்டங் களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் கைது செய்யப்பட்டனர். அகில இந்திய வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் ஏழு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற் றது. திருப்பூர் தியாகி குமரன் நினைவகம் முன்பிருந்து ஊர்வலமாகச் சென்று தலை மைத் தபால் அலுவலகம் முன்பாக அமர்ந்து  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு  மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், எல்பிஎப் நிர்வாகிகள் சிதம்பரசாமி, ரங்க சாமி, ஏஐடியுசி செயலாளர் என்.சேகர், தலை வர் சி.பழனிசாமி, ஐஎன்டியுசி செயலாளர் அ.சிவசாமி, தலைவர் அ.பெருமாள், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் ஆர்.முத்து சாமி, எம்எல்எப் செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் தலைமையேற்று இந்த மறி யல் போராட்டம் நடைபெற்றது. இதைய டுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரை யும் காவல் துறையினர் கைது செய்தனர். காங்கேயத்தில் பேருந்து நிலையம் முன்பாக சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் கே.திருவேங்கடசாமி தலைமையில் மறி யல் போராட்டம் நடைபெற்றது. இதில் காங் கயம் நகராட்சிப் பெண் தொழிலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பெண் கள் 195 பேர் உட்பட 300க்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, பணியா ளர் சங்க மண்டலச் செயலாளர் நிர்வாகி எம். துளசிமணி, அங்கன்வாடி சங்க நிர்வாகி சித்ரா, எல்பிஎப் சங்க செயலாளர் தங்க வேல், சிஐடியு கட்டுமான சங்க செயலாளர் கணேசன் உள்ளிட்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். ஊத்துக்குளி நகரில் இருந்து போராட்டக் காரர்கள் ஊர்வலமாக வந்து விஜயமங்க லம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். இப்போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.கந்தசாமி, தமிழ்  மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வி.பி.பழனிசாமி, ஊத் துக்குளி பேரூர் திமுக செயலாளர் கே.கே. ராசுக்குட்டி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சர்வேஸ்வரன், மதிமுக ஏ.எஸ்.பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக் கைகளை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார்,  சிபிஐ சார்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சின்னசாமி ஆகியோர் உரையாற்றினர். இந்த மறியலில் 150 பெண் கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.  பல்லடத்தில் பேருந்து நிலையம் முன் பாக நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு சார்பில் ஆர்.பரமசிவம் தலைமை ஏற்றார். ஏஐடியுசி நிர்வாகி கணேசன், எச்எம்எஸ் ஆனந்தராஜ், எல்பிஎப் சின்னக் கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் அனைத்து தொழிற் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர். தாராபுரம் அண்ணா சிலை முன்பு  எல்பிஎப் மாவட்ட தலைவர் கே.கே.துரை சாமி தலைமையில் சாலை மறியல் போராட் டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சிஐ டியு நிர்வாகிகள் என்.கனகராஜ், பி.பொன் னுச்சாமி உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும், போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்பட் டது. அரசு ஊழியர்கள் பணிகளை புறக் கணித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அவிநாசியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் முத்துசாமி, ஈஸ்வரமூர்த்தி, ஏஐடியூசி இசாக், ஐஎன்டியூசி வழக்கறிஞர்கள் கோபால கிருஷ்ணன், கண்ணன், எம்எல்எப் பெரு மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தினர் அவிநாசி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். உடுமலையில் தலைமை தபால் நிலை யம் முன்பு தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடை பெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட 320 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், மடத்துக்குளம் நால்ரோட்டில் நடைபெற்ற மறியல் போராட் டத்தில் ஆர். பன்னீர்செல்வம், எஸ்.ஆர்.மது சூதனன், ஆறுமுகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர். இதே போல், உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சி.நாக ராசன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில  துணைத்தலைவர் சி.சந்திரன், ஜி.நாகராஜன், பி.ஜீவா, ஏ.தெய்வானை, ஏஐடியூசி மாவட்ட  பொதுச்செயலாளர் கே.மணி, சுதர்சனம், முருகன்‌, எல்பிஎப் மாவட்ட தலைவர்கள் சண்முகராஜா, அன்புமணி, சின்னசாமி, ஏஐசிசிடியு மாவட்ட செயலாளர் சி.முரு கன், எச்எம்எஸ் மாவட்ட செயலாளர் அருச் சுணன், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் லட் சுமணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பி.டில்லிபாபு உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதைய டுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயி ரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.  

அரூர் ரவுண்டானா அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து  தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். இதேபோல், பாலக்கோடு தலைமை தபால் நிலையம்  முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி.கலாவதி தலைமை வகித்தார். இப்போராட் டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர்  பிரிவில் நடந்த சாலை மறியல் போராட்டத் தில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.ஜெகநாதன், ஏ.கே.பழனிச் சாமி, ஏஐடியுசி தலைவர் டி.ஏ.மாதேஸ் வரன், ஏஐடியூசி பவானி நகர தலைவர் சந்திர சேகரன், பவானி ஜமுக்காளம் நெசவு தொழி லாளர்கள் சங்கத் தலைவர் சித்தையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடை பெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்று கைதாகினர்.