districts

img

உதகை 126 ஆவது மலர் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்

உதகை, ஏப்.26- அரசு தாவரவியல் பூங்காவில் 126 ஆவது மலர் கண்காட்சிக்காக வண்ண மலர்களை மலர் மாடத் தில் அடுக்கி வைக்கும் பணி தொடங் கியது. மலைகளின் அரசி என அழைக் கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்க ளில் நிலவும் குளுகுளு கோடை சீசனை அனுபவிக்க உள்நாடு மட்டு மின்றி வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பய ணிகள் வருவது வழக்கம். அவ்வாறு இதமான காலநி லையை அனுபவிக்க உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ் விக்கும் வகையில் மாவட்ட நிர்வா கம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இதனையடுத்து, இந்தாண்டு உலகப் புகழ்பெற்ற உதகை அரசு  தாவரவியல் பூங்காவில் வருகிற மே மாதம் 17 ஆம் தேதியன்று தொடங்கி 22 ஆம் தேதி வரை 6  நாட்கள் என இந்த 126 ஆவது மலர்  கண்காட்சி நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உதகை அரசு  தாவரவியல் பூங்காவில் இந் தாண்டு நடைபெறும் 126 ஆவது  மலர்க்கண்காட்சிக்காக 62 மலர்  வகைகளில், 262 ரகங்களைக் கொண்ட 60 ஆயிரம் தொட்டிக ளில் டேலியா, சால்வியா, கேண்டி டப்ட், ஜெனியா, பால்சம், அஜி ரேட்டா உள்ளிட்ட ரகங்களில் மலர்  செடிகள் பராமரிக்கப்பட்டு வந்தன.  மேலும் கண்ணாடி மாளிகை அருகே உள்ள புல்வெளி மைதா னத்தை பராமரிக்க பல்வேறு வண் ணங்களில் பூத்துக் குலுங்கும் 15  ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணி கள் வெள்ளியன்று தொடங்கியது. இதில் பூங்கா ஊழியர்கள் மும்முர மாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பூங்காவில் புல்வெளி மைதானங் களை சீரமைக்கும் பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தல் பிற மாநிலங்களில் வெவ் வேறு கட்டமாக நடைபெற இருப்ப தாலும், தேர்தல் விதிமுறைகள் அம லில் உள்ளதாலும் கோடை சீசனில் ஆண்டுதோறும் நடைபெறும் காய் கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி,  வாசனை திரவிய கண்காட்சிகள்  இந்தாண்டு தேர்தல் ஆணையத் தின் அறிவுறுத்தலின் பிறகே தேதி கள் அறிவிக்க உள்ளது. இதனால் ஆண்டுதோறும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள்  நடைபெறும் மலர்கண்காட்சியா னது இந்த ஆண்டு 10 முதல் 12  நாட்கள் வரை நடைபெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளிலும் பூங்கா நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வரு கின்றனர்.