districts

img

புளியம்பட்டி மாட்டிறைச்சி கடைகள் அமைக்கும் பணி ததீஒமு நேரில் சென்று பார்வையிட்டனர்

ஈரோடு, ஜுலை 22- புன்செய் புளியம்பட்டி நகராட்சி வாரச் சந்தையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு கடைகள் அமைக்கும் பணியை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நேரில் சென்று பார்வையிட்டனர். ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம் பட்டியில் பிரபலமான வாரச்சந்தை செயல் பட்டு வருகிறது. இங்கு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மாட்டிறைச்சி கடைகள் திடீரென அகற்றப்பட்டது. இதனை எதிர்த்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பல் வேறு போராட்டங்களை நடைபெற்றன.  அருந்ததிய மக்கள் வாயில்லா பூச்சி களா?, அவர்களுக்கு நாங்கள் இருக் கிறோம் என நகராட்சி அலுவலக வளா கத்தில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சு. முத்துசாமி தலையிட்டு, அதே இடத்தில் கடை கள் நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், வாரச்சந்தையில் மாட்டி றைச்சி விற்பனைக்கு கடைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அதனை மாநிலத்  தலைவர் டி.செல்லக்கண்ணு, துணைத் தலைவர் யூ.கே.சிவஞானம், மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி மற்றும் திருப்பூர்  மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர்  பார்வையிட்டனர்.