கோவை, ஜன.3- பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் மண்பானை தயாரிக் கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பொங்கல் பண்டிகை வருகிற 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், பொங்கலிடுவ தற்கு பயன்படும் மண்பானைகள் தயாரிக்கும் பணியும் தீவிரமடைந் துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான ஆர்.பொன்னாபுரம், முத் தூர், வடக்கிபாளையம், கோட்டூர், ஒடையக்குளம், தேவபட்டினம், சேத்துமடை, அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலக்குறிச்சி உள் ளிட்ட கிராமங்களில் தொழிலா ளர்கள் மண் பானைகளை தயாரிக் கும் பணிகளை தொடங்கி விட்டனர். இதனிடையே, மாவட்டத்தில் பெய்த பருவமழை மற்றும் மேகமூட்டம் காரணமாக மண்பானை தயாரிப் பில் சற்று தொய்வு ஏற்பட்டாலும், தற்போது மீண்டும் மண்பானை தயாரிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. ஒரு அடி முதல் பெரிய அளவி லான மண்பானைகள் வரை என சிறியதும், பெரியதுமாக மண்பானை களை தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர். மண்பானைகள் தயாரிப்பு ஒருபுறம் மும்முரமாக நடந்து வந்தாலும், மண்பானை தயாரிப்புக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான மண் கிடைப்ப தில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மண்பாண்ட தொழி லாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஒரு மாதத்திற்கு முன்பாகவே பானை தயாரிப்பில் ஈடுபடுவோம். இந்த ஆண்டு பொங்கலுக்கு தேவையான பானை தயார் செய்து, மார்க்கெட்டில் விற்பனைக்கு அனுப்பிவைப்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். பொங் கல் நெருங்குவதை முன்னிட்டு பொள்ளாச்சி மட்டுமின்றி, உடுமலை, பழனி, பல்லடம், சுல்தான்பேட்டை, நெகமம் உள்ளிட்ட பல இடங்க ளில் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளது. கடந்த அண்டை விட இந்த ஆண்டு பொங்கல் பானை ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. போதிய அளவு களிமண் கிடைக்காததால் அதிக விலைக்கு பானைகள் விற் பனை செய்ய வேண்டி உள்ளது என கூறினர்.