districts

“ஒரே என்ற சொல்” இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது: ஏ.ராதிகா பேச்சு

தருமபுரி, மார்ச் 13- “ஒரே என்ற சொல்” இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என  தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.ராதிகா தெரிவித்துள் ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், சர்வ தேச மகளிர் தினவிழா சிறப்பு கருத்த ரங்கம் தருமபுரி முத்து நினைவு  அறக்கட்டளை அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித் தார். நகரச் செயலாளர் எஸ்.நிர் மலாராணி வரவேற்றார். இதில்  சங்கத்தின் மாநில பொதுச்செயலா ளர் ஏ.ராதிகா சிறப்புரையாற்றுகை யில், 1910 ஆம் ஆண்டு அமெரிக்கா வின் நியூயார்க் நகரத்தில் உழைப் புக்கு ஏற்ற ஊதியம், ஓய்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயி ரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. இது தான் சர்வதேச மகளிர் தின வரலாறு. இன்று மகளிர் தினம் என்றால் ஜவுளி கடைக்கு போவது, நகை வாங்கு வது என்று சொல்லி வைத்துள்ளார் கள். உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங் கியது ரஷ்யாதான். ரஷ்யாவில்  புரட்சி ஏற்பட்டு லெனின் தலைமை யில் ஆட்சி அமைத்தபோது பெண்க ளுக்கு வாக்குரிமை வழங்கப்பட் டது. காலை எழுந்தவுடன் இரவு  உறங்கும் வரை வீட்டில் வேலை  செய்கின்றனர். பெண்களை மதிப் பற்றவர்களாக சமூகம் மாற்று கிறது. உலகத்திலேயே பெண்கள் அதிகளவில் வன்முறைக்குள்ளாக் கப்படுவது இந்தியாவில்தான். ஒரு பெண்ணை ஆண் அடிமையாக பார்ப் பது, அடிப்பது பெருமையாக கருதப் படுகிறது. இதனை தடுக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த 10 ஆண்டு காலத்தில் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறை அதிகளவில் நடை பெற்று வருகிறது. பில்கிஸ்பானு  பாதிக்கப்பட்ட போது ஆர்எஸ்எஸ், பாஜக குற்றவாளிகளை காப்பற்றி யது. உச்சநீதிமன்றம் சென்று நீதி  கிடைத்தது. சமீபத்தில் சாமியார் கள் ஒரு மாநாடு நடத்தினர். இந்த  மாநாட்டு தீர்மானமாக இந்துராஷ் டிரம் நாடாக மாற்றுவது, பெண்கள்  படிக்கக்கூடாது, வேலைக்கு செல் லக்கூடாது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு பதிலாக  மனுஸ்மிருதி சட்டத்தை அமல் படுத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். பெயரள வில் பெண்களுக்கு 33 சதவிகித இட  ஒதுக்கீடு மசோதவை தாக்கல்  செய்துவிட்டு, கிடப்பில் போட்டுள் ளனர். “ஒரே என்ற சொல்” இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. ஊட் டச்சத்து குறைபாட்டினால் பெண்க ளுக்கு ரத்தசோகை ஏற்படுகிறது. ஆனால், மோடி அரசு உணவு பொருட் கள் மீது ஜிஎஸ்டி வரியை விதிக் கிறது. கடந்த 10 ஆண்டுகாலத்தில் எதையும் செய்யாத மோடி, ராமர் கோவிலை காட்டி ஓட்டு வாங்கிவிட லாம் என நினைக்கிறார். பாஜகவின் வெறுப்பு அரசியலை வேரறுப் போம்! பெண்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க, பாஜகவை வீழ்த்து வோம், என்றார். இந்நிகழ்ச்சியில், மாதர் சங்க  மாவட்டச் செயலாளர் ஆர்.மல் லிகா, முன்னாள் மாவட்டச் செய லாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட் டப் பொருளாளர் எம்.வளர்மதி, மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி, கே. சுசிலா, பி.கிருஷ்ணவேணி, பி.சுதா பாரதி, ஒன்றியத் தலைவர் எம். தமிழ்மணி, ஒன்றியச் செயலாளர் எம்.மீனாட்சி, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டி.காளியம் மாள், மாதர் சங்க மூத்த நிர்வாகி ரத் தினம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.