திருப்பூர், ஜன.13- தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன் னிட்டு திருப்பூரில் செங்கரும்பு, மஞ்சள் கொத்து மற் றும் கூரைப் பூ உள்ளிட்டவற்றின் வியாபாரம் களைக் கட்டியது. திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி செங்கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்கள் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தன. விவசாயத்துக்கு ஆதாரமாக விளங்கும், இயற்கையை வணங்கும் விதமாக பொங் கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமி ழர்களின் முக்கிய திருநாளாகவும் பொங்கல் விளங்கு கிறது. இந்த பண்டிகையை கொண்டாட ஒரு மாதம் முன்பிருந்தே இப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் தயா ராகி வருகின்றனர். பொங்கலுக்கு செங்கரும்பு, பானை களில் மஞ்சள்கொத்து கட்டி வழிபடுவது வழக்கம். இதனால் செங்கரும்பு, பானை, மஞ்சள் கொத்து விற்பனை ஆண்டுதோறும் பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே களைகட்ட துவங்கும். பொங் கல் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலை யில் செங்கரும்பு, பொங்கல் பானைகள், மஞ்சள் கொத்து மற்றும் பூளைப் பூ விற்பனையும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூரில், தென்னம் பாளையம் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை களை கட்டியுள்ளது. குறிப்பாக செங்கரும்பு ஜோடி, ரூ.50 முதல் ரூ.100 வரையும், மஞ்சள் கொத்து 30 ரூபாய்க்கும் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் காப்பு கட்டு வதற்கு தேவையான பூளைப்பூ, ஆவாரம்பூ மற்றும் வேப்பிலை அடங்கியவை ஒருகொத்து, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் இன்று கொண்டாடப்படும் நிலையில் பொருட்கள் வாங்கு வதற்காக மார்கெட்டில் அதிகளவில் மக்கள் கூட்டம் அலை மோதியது.