districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 10 அடியாக சரிவு

கோவை, மே 8- சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. தற்போது உள்ள நீரின் அளவை கொண்டு, இன்னும் ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்க முடியும் என குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. கோவை மாநகர பகுதியில் உள்ள 100 வார்டுகளில் பில் லூர் 1, பில்லூர் 2, சிறுவாணி, ஆழியார் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக குடிநீர் விநி யோகிக்கப்படுகிறது. இதில் அதிகப்படியான வார்டுக ளுக்கு சிறுவாணி மற்றும் பில்லூர் குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயி லின் தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த மாதங்களில் 30  அடி இருந்த சிறுவாணி அணையின் நீர்மட்டம் செவ்வா யன்று நிலவரப்படி 10 அடியாக சரிந்து உள்ளது. அணை யில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர்  தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 கோடி  லிட்டருக்கும் குறைவான அளவில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாநகரில் குடிநீர் விநியோகிக்கும் இடை வெளி அதிகரிக்கப்பட்டு உள்ளது. சிறுவாணி நீர் மட்டு மின்றி பில்லூர் குடிநீர் விநியோகிக்கப்படும் பகுதிகளில் சில  இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை சில இடங்களில்  20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப் பட்டு வருகிறது.  இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில்:- சிறுவாணி அணையில் தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் நான்கு வால்வுகள் உள்ளன. அதில் மூன்று வால்வு கள் கீழ்நோக்கியும் நான்காவது வால்வு மேல் நோக்கியும் உள்ளன. தற்போது அணையில் நீர்மட்டம் 10 அடியாக குறைந்து உள்ளதால் மூன்றாவது வால்வு வெளியே தெரி கிறது. தற்போது அணையில் உள்ள தண்ணீர் மூலமாக இன்னும் ஒரு மாதத்திற்கு குடிநீர் விநியோகிக்க முடியும் என்றனர்.

உதகையில் பூத்துக்குலுங்கும் பூக்கள்

உதகையில் பூத்துக்குலுங்கும் பூக்கள் உதகை, மே 8- உதகை, கர்நாடகா அரசு பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்த னர்.  நீலகிரி மாவட்டம், உதகையில், கர்நாடக மாநில தோட்ட  கலைத்துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்கா வில், 30 ஏக்கர் பரப்பில், பல்வேறு வகையான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு, தற்பாது, ‘கேலா  லில்லி, ஜெர்மனியம், ரெட் ஹாட் போகர், பிகோனியா’ உட்பட பல வண்ண மலர் செடிகள் பூத்து குலுங்குகின்றன. அதில், குறிப்பாக, பல்வேறு வகை, வெளிநாட்டு மலர்கள் கொண்டு, ‘மலர் நீர் வீழ்ச்சி’ அமைக்கப்பட்டுள்ளது. வண்ண மயமாக பூக்கள் பூத்துள்ளதால் பார்வையாளர்கள் மத்தியில்  வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் அருகே, சுற்றுலாப் பயணி கள் நின்று ‘சுயபடம்’ எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நஞ்சப்பா நகராட்சிப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

திருப்பூர், மே 8 - திருப்பூரில் பாரம்பரியமிக்க நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 94.4 சதவீத தேர்ச்சி பெற் றுள்ளனர். மாணவன் ஹபிபுர் ரகுமான் 600 க்கு 571  மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். ராகுல் 558 மதிப்பெண் பெற்று  இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். 557 மதிப் பெண்களுடன் தர்ஷன் மூன்றாம் இடத்தை யும், 555 மதிப்பெண்களுடன் தினேஷ் 4ஆம்  இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் 14 பேர்  500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ள னர். 8 மாணவர்கள் வணிகவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள் ளனர். கணினி பயன்பாடு பாடத்தில் ஒருவர்  நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார். கணினி பயன்பாடுகள் பாடத்தில் 4 பேர், பொருளியல் பாடத்தில் 3 பேர், கணினி அறி வியல் பாடத்தில் ஒருவர், வணிகவியல் பாடத் தில் ஒருவர் 100க்கு 99 மதிப்பெண் பெற்றுள் ளனர். வணிகவியல் பாடத்தில் 19 பேர் கணக் குப்பதிவியலில் 18 பேரும், தமிழில் 15 பேர்,  கணினி பயன்பாடுகள் பாடத்தில் 15 பேர்,  கணினி அறிவியல் பாடத்தில் 8 பேர் பொரு ளியல் பாடத்தில் 6 பேர்,நெசவுத் தொழில்நுட் பம்  பாடத்தில் 2 பேர், ஆங்கிலம், கணிதம்,  வேதியியல் பாடங்களில் தலா ஒருவர் என  100க்கு 90க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ள னர். சாதனை மாணவர்களை தலைமை ஆசிரி யர் பழனிசாமி பாராட்டினார்.

ரூ. 300 கோடி மோசடி செய்த கும்பலிடமிருந்து நகை, பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கோவை, மே 8- கோவையில் தொழில் அதிபரிடம் ரூ. 300  கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் குற்ற வாளிகளிடமிருந்து சுமார் ரூ. 12 கோடி பணம், 140 பவுன் நகை, ரூ.100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற் றியுள்ளனர்.  கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர்  பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவல கத்தை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான  இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர்  சிவராஜுக்கு சொந்தமான சுமார் ரூ. 200 கோடி  சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும், ரூ. 100 கோடி பணத்தையும் மோசடி  செய்துள்ளனர். மோசடி செய்ததை அறிந்த  சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பி ரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீ சார் மோசடியில் ஈடுபட்ட வசந்த், சிவகுமார்,  ஷீலா, தீக்ஷா, சக்தி சுந்தர் என மொத்தம் ஐந்து  பேரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரித்த கோவை மாநகர  குற்றப்பிரிவு காவல் துறையினர், புதனன்று குற்றவாளிகளிடமிருந்து சுமார் ரூ. 12 கோடி  பணம்,140 பவுன் நகை, ரூ.100 கோடி மதிப்பி லான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, வங்கி கணக்குகளை முடக்கினர்.

உதகையில் மே 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

உதகை, மே 8- 126ஆவது மலர் கண்காட்சி தின மான மே 10 ஆம் தேதி உதகையில்  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள் ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் மே  10 ஆம் தேதி மலர் கண்காட்சி, ரோஜா  கண்காட்சி துவங்குகிறது. இக்கண் காட்சி, இம்மாதம் 20ம் தேதி வரை நடை பெற உள்ளது. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க அரசு தாவரவியல் பூங்கா வில் 270 ரகங்களில் 10 லட்சம் மலர்கள்  தயார்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல்  ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் வகைக ளில், 40 ஆயிரம் ரோஜாக்கள் பூத்து குலுங்குகிறது.  உதகை அரசு தாவரவியல் பூங்கா வுக்கு கடந்த ஒரு வாரமாக சராசரியாக 15 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். கடந் தாண்டில், மலர் கண்காட்சி துவங்க உள்ள இரண்டு நாட்களுக்கு முன்பு  25 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த எண் ணிக்கை மேலும் கூடும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்நிலையில், உதகை யின் பிரசித்தி பெற்ற 126 வது மலர் கண்காட்சி தினமான மே 10 ஆம் தேதி  மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு கிரைம் போலீசார் உதகையில் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கோடை சீசனை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்காக கோவை சரக டி.ஐ.ஜி., உத்தரவின் பேரில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து போலீ சார் வந்துள்ளனர். இதேபோல், தமிழ் நாடு சிறப்பு போலீசார் மற்றும் நீலகிரி  போலீசார் என மொத்தம், 600 பேர் பாது காப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேவைப்பட்டால் கூடுதல் போலீசார்  பணியமர்த்தப்படுவார்கள். உதகை  நகர் மற்றும் சோதனை சாவடிகளில்  சுமார், 1300 கேமராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.  மேலும், சுற்றுலாத் தலங்களில் குற்றச்  சம்பவங்களை தடுப்பதற்காக சிறப்பு  கிரைம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ள னர்.

சாலையின் இருபுறத்திலும் மரங்கன்றுகள் நடவ வலியுறுத்தல்

சாலையின் இருபுறத்திலும் மரங்கன்றுகள் நடவ வலியுறுத்தல் பொள்ளாச்சி, மே 8- தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் அமைக்கப்படவுள்ள மழைநீர் வடிகால்வாய் மற்றும்  புதிதாக நடப்பட உள்ள மரங்களை சர்வீஸ் சாலைகளின் இருபுற ஓரங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வலியு றுத்தியுள்ளனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார் பில், திங்களன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ.கேத்த ரின் சரண்யாவிடம் மனு அளித்தனர். அதில், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் திண்டுக்கல் - கொச்சின் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. பொள் ளாச்சி வட்டத்தில் கிட்டா சூராம்பாளையம், ஆச்சிப் பட்டி, குரும்பாளையம் ஆகிய பகுதிகளில் நெடுஞ் சாலை மற்றும் சர்வீஸ் சாலை பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக் கான விவசாயிகள் அந்த சாலைகளை பயன்படுத்தி தங்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களில் அமைக்கப்பட உள்ள மழைநீர் வடிகால்வாய் மற்றும் புதிதாக நடப்பட உள்ள மரங்களால் இப்பகுதி விவசா யிகளுக்கு, தங்களது விளைநிலங்களுக்கு சென்று வர  பெரும் தடையாக இருக்கும். ஆகவே அமைக்கப்பட உள்ள மழைநீர் வடிகால்வாய் மற்றும் புதிதாக நடப்பட  உள்ள மரங்களை சர்வீஸ் சாலைகளின் இருபுற ஓரங்க ளிலும் அமைக்கப்பட வேண்டும். இதில், சார் ஆட்சியர் தலையிட்டு நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் கே.மகாலிங் கம், மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கே.மனோ கரன் உள்ளிட்டோர் மாவட்ட சார் ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட  சார் ஆட்சியர், மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுப்பதாக கூறினார்.

மரங்களை வெட்டாமல் அலுவலகம் கட்ட வலியுறுத்தல்

மரங்களை வெட்டாமல் அலுவலகம் கட்ட வலியுறுத்தல் சேலம், மே 8- வாழப்பாடியில் பழமையான மரங்களை வெட்டா மல், சார் பதிவாளர் அலுவலகம் கட்ட வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவல கம் தற்பொழுது வரை செயல்பட்டு வருகிறது. இந்த சார்  பதிவாளர் அலுவலகம் பல ஆண்டுகளுக்கு மேலாக செயல் பட்டு வருவதால், பழுதான நிலையில் உள்ளது. இதனி டையே, தமிழக அரசு மற்றும் பதிவுத்துறை சார்பில், வாழப்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தை இடித்து புதிய கட்டிடம் கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார் பில் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும், வாழப்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 100 ஆண்டுக ளுக்கு மேல் உள்ள பழமை வாய்ந்த வேப்பமரம், இலவ மரம், வில்வமரம் அசோகா மரம் உள்ளிட்டவைகள் உள்ளன. இந்த மரங்களை வெட்டி புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டப்பட உள்ளதால், சூழல் மாற்றம் மற்றும் மரங்களில் வாழும் பறவை இனங்கள் அழியும்  அபாயம் உள்ளது. எனவே, மரங்களை வெட்டாமல் சார்  பதிவாளர் அலுவலகம் கட்ட வேண்டும் என சேலம் ஆட் சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் மனு அளித்த னர்.

சுற்றுலா வழிகாட்டுதலுக்கு கியூஆர்கோடு வசதி

உதகை, மே 8- நீலகிரி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக கியூஆர்கோடு திட்ட வரைபடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி கள் வந்து செல்கின்றனர். இதில் கோடை  சீசனான ஏப்ரல், மே மாதத்தில் மட்டும், 10 லட் சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதில், 80 சதவீதம் பேர் சொந்த வாகனங்களில் வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் உதகை நகருக்குள் வரும்போது கடும் போக் குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப் பதற்காக ஒருவழிப்பாதை அமைத்தல் உள் ளிட்ட மாற்று ஏற்பாடுகளை போலீசார் செய் துள்ளனர். இந்நிலையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட சாலையில் இருந்து  அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம்,  ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உட்பட பல் வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்காக, சுற்றுலாப் பயணிகளுக்காக கியூ.ஆர் கோடு டன் கூடிய வழிகாட்டி வரைபடம் வழங்கும் திட்டத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சுந்தரவடிவேல் புதனன்று தொடங்கி வைத்தார். குன்னூர் சந்திப்பில் துவக்கி வைத்து சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த திட்டம் குறித்து விரிவாக விளக்கி னார். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் அந்த  வரைபடத்தை பார்த்து தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்லலாம். ஒருவேளை மற்ற மாநிலத்தவர்கள் இருந்தால், வரைபடத்தில் உள்ள கியூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து தாங் கள் விரும்பும் இடங்களுக்கு செல்லலாம். 

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்

உதகை காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

உதகை, மே.8- நீலகிரியில் இ-பாஸ் நடைமு றையை ரத்து செய்யாவிட்டால் போராட் டம் நடத்தப்படும் என ஊட்டி காட்டேஜ் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறி வித்துள்ளனர்.  மலைகளின் அரசி என்று புகழப் படும் சர்வதேச சுற்றுலாத்தலமான நீல கிரிக்கு கணக்கில் அடங்காமல் சுற் றுலாப் பயணிகள் வருவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கழிப்பறை, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை அனைவருக்கும் வழங்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்திற்குள்  வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற் றுலாப் பயணிகள் வரும் வாகனங்க ளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நீலகிரிக்கு வரும் அனைத்து  வாகனங்களுக்கும் இ - பாஸ் வழங்கப் படும் என வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டாலும், இதுகுறித்து பலருக்கும் தெரியாததால் நீலகிரிக்கு குறைந்த எண்ணிக்கையிலான சுற்று லாப் பயணிகள் மட்டுமே வந்தனர்.  இதனால் முக்கிய சுற்றுலா தளங்களும்  சாலைகளும் வெறிச்சோடி காணப்பட் டன. எனவே இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஊட்டி காட் டேஜ் உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.  இதுகுறித்து காட்டேஜ் உரிமையா ளர்கள் சங்க செயலாளர் மகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், இ-பாஸ் நடைமுறை குறித்து தமிழகம் மற்றும் கேரளா உள்பட பல்வேறு மாநில மக்க ளுக்கு சரிவர தெரியவில்லை. ஒரு சில  நேரங்களில் இ-பாஸ் இல்லாமல் வந்து  நீண்ட நேரம் சோதனை சாவடியில் காத் திருந்து திரும்பி செல்கின்றனர். இத னால் கோடை சீசனை முன்னிட்டு ஏற்க னவே முன்பதிவு செய்து இருந்த தங்கும் விடுதிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  இதனால் 80 சதவீதம் காட்டேஜ்கள் காலி யாக இருக்கும் நிலையில் இ-பாஸ் நடைமுறையால் காட்டேஜ் தொழில் உட் பட அனைத்து சுற்றுலாத் தொழில்களும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே ஆகிய கோடை சீசனில் மட்டும்தான் ஒரு வருடத்திற்கு தேவையான முழு வியாபாரம் நீலகிரியில் நடக்கும். தற் போது இ-பாஸ் நடைமுறையால் உள் ளூர் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இ-பாஸ் முறையை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் காட்டேஜ்கள் மூடப்படும். சுற்றுலாவை நம்பி உள்ள பல்வேறு அமைப்புகளை ஒன்று சேர்த்து வேலை நிறுத்த போராட் டம் நடத்தப்படும், என்றார்.

பயிற்சிக்கு சென்ற மாணவர்களின் சபாஷ் முயற்சி

சேலம், மே 8- ஊரக பணி அனுபவத்திற்காக பயிற்சிக்கு நெய்யமலை கிராமத் திற்கு சென்ற மாணவர்கள், அக்கி ராமத்தில் எவ்வித அடிப்படை வசதி களும் இல்லை என்பதை உணர்ந்து,  ஆட்சியரை சந்தித்து அக்கிராமத் திற்கு அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருச்சி அரசு அன்பில் தர்மலிங் கம் வேளாண்மை கல்லூரி மாண வர்கள் சஞ்சய்குமார், சத்தியன், ஸ்ரீபாலா, ஸ்ரீதரன், ஸ்ரீசூர்யா, சௌந் தர்யன், தானேஷ்வரன், வசந்த் குமார், விக்னேஷ், விஷ்ணு வரதன் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஊரக பணி அனுபவ பயிற்சிக்காக பெத்தநாயக்கன்பாளையம் வட்டா ரத்தில் முகாமிட்டுள்ளனர். இந்த  மாணவர்கள், பெத்தநாயக்கன்பா ளையம் வட்டம், இடையப்பட்டி ஊராட் சியில் பேருந்து வசதி இல்லாத நெய்ய மலை கிராமத்திற்கு சென்று கிராமத் தின் வளம், வேளாண்மை, மக்களின் வாழ்க்கை முறை, பொருளாதாரம், கல்வி குறித்து கள ஆய்வு செய்து மக் களுடன் கலந்துரையாடல் நடத்தி னர்.  இதனையடுத்து, இந்த கிராம மக் களின் கல்வி, பொருளாதாரம், வாழ் வியல் முன்னேற்றத்துக்கு வழிவகுக் கும் நோக்கில், 3 கி.மீ. மலைப்பா தையை சீரமைத்து அரசு சிற்றுந்து (மினி பஸ்) போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும். கிராம மக்கள், கர்ப்பிணிகள், முதியோர் அவசர முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு துணை சுகாதார நிலையம் அமைக்க  வேண்டும். கிராம மக்கள் வேலை வாய்ப்பு பெற விவசாயக்குழுவுக்கு சிறுதானியம், மரவள்ளிக்கிழங்கு மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வழங்கி பயிற்சி அளிக்க வேண்டு மென வலியுறுத்தி, நெய்யமலை கிராம மக்களின் சார்பில் திருச்சி வேளாண் கல்லூரி மாணவர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பயிற்சிக்கு சென்ற மாணவர்கள் பயிற்சி முடித்த பின், அவரவர் வேலையை பார்க்க போய்விடுகிற நிலையில், தாங்கள் தங்கியிருந்த கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதி களும் இல்லை என்பதை அறிந்து, இதற்கான முன்னெடுப்பை மேற் கொண்டது அனைவரின் கவனத்தை யும் ஈர்த்துள்ளது.

ஏற்காடு விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

ஏற்காடு விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு சேலம், மே 8- ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்த  விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள் ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் இருந்து சேலம் நோக்கி 69 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த தனி யார் பேருந்து, 13 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளா னது. இந்தப் பேருந்து சுமார் 80 அடி பள்ளத்தில் சரிந்து 11  ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையோரம் இருந்த  மரத்தின் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில், திருச் செங்கோடு முனிஸ்வரன் (11), சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (37), கன்னங்குறிச்சி ஹரிராம் (57), ஏற்காடு  வட்டார வழங்கல் அலுவலக ஊழியர் சந்தோஷ் (41), கிச்சிப் பாளையம் மாது (60) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலை யில் விபத்தில் படுகாயமடைந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தருமபுரி மாவட் டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் (62)  சிகிச்சைப் பலனின்றி செவ்வாயன்று உயிரிழந்தார். இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந் துள்ளது.