districts

img

தனியார் இரும்பு ஆலை வெளியேற்றும் நச்சுப்புகை கோரத்தாண்டவத்தில் நிம்மதி இழந்த கிராம மக்கள்

திருப்பூர், ஜூலை 22 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தொட்டம்பட்டி பகுதியில், அதிக அளவு நச்சுப்புகை வெளியி டும் தனியார் இரும்பு ஆலை உள்ளது. மீது சட்டப்படி கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என  விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.      பல்லடம் வட்டம் தொட்டம்பட்டி அருகே வலையபாளையம் பகுதி யில் வசித்து வருபவர்் பெருமாள் சாமி. இவர், சிறு அளவு நிலம் வைத் துள்ளார். கால்நடை வளர்ப்பு மற்றும்  விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரு கிறார். இவரது வீட்டுக்கு மிக அருகில் தனியார் இரும்பு தொழிற்சாலை ஒன்று சட்டவிரோதமாக இயக் கப்பட்டு வருகிறது. அங்கு வெளி யேற்றப்படும் நச்சுப்புகை காரண மாக இப்பகுதி மக்கள் கடுமையாக  பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக குறு விவசாயி பெருமாள்சாமியின் மாடு ஒன்று இந்த நச்சுப் புகை  கார ணமாக இறந்துவிட்டது. இவரது 4  வயது மகன், 3 வயது மகள் இருவரும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப் பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அடிக் கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது. நச்சுப்புகை வீரியம் கார ணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து மரங்களும் கரிய  நிறத்தில் மாறியிருக்கின்றன.

இது தொடர்பாக நீண்ட காலம் சட் டப்போராட்டம் நடத்தியதுடன், ஊட கங்களில் தொடர்ந்து செய்தி வெளி யிடப்பட்டதன் காரணமாகவும் அந்த  ஆலையின் இயக்கம் தடுத்து நிறுத் தப்பட்டது. ஆனால் சில மாதங்களுக் குப் பிறகு இந்த தொழிற்சாலை பல் லடம் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு கை  மாற்றப்பட்டு விட்டது.  இந்த ஆலை தொடர்ந்து வெளி யேற்றி வரும் நச்சுப்புகை காரண மாக இந்த வட்டாரத்தில் மக்கள் வாழ  முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. கரிய நிறத்து நச்சுப்புகையின் கார ணமாக இரவு நேரங்களில் துர்நாற்றத் துடன் மூச்சுத்திணறும் அளவுக்கு உள்ளது. இரவு நேரங்களில் லாரி களில் பல லோடு பிளாஸ்டிக் மற்றும்  இரும்பு  கழிவுகள் கொண்டு வரப் பட்டு எரிக்கப்படுகிறது.  இதனால் விவசாயத் தோட்டத் தில் விளையும் தக்காளி, கத்தரி, அவரை, வெண்டை, வெங்காயம் போன்ற காய்கறி பயிர்கள் பூக்கள் விளையும் முன்பே உதிர்ந்து விடு கின்றன. இதனால் எங்கள் பொருளா தாரம் முற்றிலும் பாதிக்கப்பட் டுள்ளது என்று பெருமாள்்சாமி கூறியிருக்கிறார். இரவு நேரத்தில் காய்வதற்காகப் போடப்படும் வெண் ணிற துணிகள் காலையில் கருமை  படிந்து காணப்படுவது இவர்களது சட்டவிரோத செயலுக்கு சான்றா கும். எனவே, அதிகாரிகள் கள நிலவரம் அறிய சம்பந்தப்பட்ட பகுதிக்கு வர வேண்டும். அரசு நிர்வாகம், அதிகாரி கள் இந்த கிராம மக்கள் வாழ்வாதா ரம் பாதுகாக்கவும், நச்சுப்புகையின் கோரத் தாண்டவத்தில் இருந்து  விடிவு காணவும் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தெரிவித்துள் ளார்.