நாமக்கல், ஜூலை 5- பள்ளிபாளையம் அருகே தனி யார் காகித ஆலையிலிருந்து வெளி யேறும் சாம்பல் கலந்த புகையால் ஒரு கிராமமே பாதிப்புக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே தனியார் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து மூன்று புகை போக்கிகள் வழியாக புகைகள் வெளி யேற்றப்பட்டு வருகிறது. புகையுடன் சாம்பலும், கருந்தூசும் வெளியேறி வருவதால், ஆலைக்கு அருகிலுள்ள ஆயக்காட்டூர் எனும் கிராமமே அவதி யுறும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்பொ ழுது இப்பகுதியைச் சேர்ந்த மக்க ளுக்கு சுவாசக்கோளாறு மற்றும் எதிர்பாராமல் குழந்தைகள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வீடுகளுக்கு உள்ளே வெள்ளை நிற சாம்பல் படிவதால் உணவு சமைக்கவும், குடிநீர் அருந்த வும் முடியாமல் பொதுமக்கள் சிரமத் திற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை ஆலை நிர்வா கத்திடம் எடுத்துக்கூறியும், குடியி ருப்புப் பகுதிகளை வந்து ஆய்வு செய்தபின், அதிகாரிகள் ஆலையின் புகை போக்கி ஓட்டை விழுந்து உள் ளது. பராமரிப்பு பணி நடந்து வருகி றது என பல்வேறு சாக்கு போக்கு களை சொல்லி வருகின்றனர். ஆனால், அந்த புகைப்போக்கியை சுத்தம் செய் வதில் மெத்தனம் காட்டி வருகின்ற னர். இதனால் இந்த கிராமம், மக்கள் வாழத் தகுதியற்றதாக மாறி வரு கிறது. எனவே, தமிழ்நாடு அரசு இப் பிரச்சனையில் தலையிட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.