உதகை, பிப்.20- மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் 60 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் பலியானார். நீலகிரி மாவட்டம், நஞ்ச நாடு பகுதியைச் சேர்ந்த வர் கணேசன் (50). இவரது மனைவி மஞ்சுளா(47). கணவன், மனைவி இருவரும் தங்களது ஜீப்பில், கோவை சென்று விட்டு செவ்வாயன்று மதியம் தங்களது சொந்த ஊரான நஞ்சநாடு திரும்பி கொண்டிருந்தனர். மேட்டுப்பாளையம் நகரை கடந்து கல்லார் மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது, ஜீப் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் கணேசன் நிகழ்விடத்தி லேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறை யினர் மஞ்சுளாவை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.