districts

img

விசைத்தறி போராட்டத்திற்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் அரை நிர்வாண போராட்டம்

அவிநாசி, பிப்.10- அவிநாசி அருகே, வஞ்சிபாளையத்தில் விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி தொழிற்சங் கத்தினர் வியாழனன்று அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி களுக்கு அறிவித்த கூலி உயர்வை அமல் படுத்தக் கோரியும், 2 லட்சம் விசைத்தறி யாளர்களின் குடும்பத்தின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்கக்கோரியும்,  கடந்த 8  ஆண்டுகளாக கூலி உயர்வு வழங்க மறுக் கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித் தும் பல நாட்களாக விசைத்தறி உரிமையா ளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட் டத்திற்கு ஆதரவாக விசைத்தறி தொழிலா ளர் சங்கத்தினரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  இந்நிலையில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியூசி, ஏடிபி, எம்எல்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தினர் அரசு அறிவித்த கூலி உயர்வு வழங்க மறுத்து வரும் ஜவுளி உற்பத்தி யாளர்களை கண்டித்தும், இப்பிரச்சனை யில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலை யிட வலியுறுத்தியும், வியாழனன்று வஞ்சி  பாளையத்தில் அரை நிர்வாண போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர்.  இதில் சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சம்மேளனத்தின் மாநில தலைவர் முத்து சாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க  மாவட்ட தலைவர் வேலுசாமி, மாவட்ட நிர் வாகிகள் பழனிச்சாமி, மோகனசுந்தரம், முரு கன், ஏஐடியுசி செல்வராஜ், கனகராஜ், எம்எல்எப் பாண்டியராஜன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.