districts

img

முதலமைச்சர்கள் போராடும் அளவிற்கு ஒன்றிய மோடி அரசு தள்ளியுள்ளது

திருப்பூர், பிப்.22- மாநில முதலமைச்சர்கள் போராடும் சூழலை உருவாக்கி யுள்ள மோடி தலைமையிலான ஒன் றிய அரசை இந்திய மக்கள் வரும்  தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவார் கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் பெ.சண்முகம் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் வடக்கு ஒன்றியக் குழு சார்பில் நிதியளிப்பு மற்றும்  அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் புதனன்று அங்கேரிபாளையத்தில் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் பி.நரேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில், திருப்பூர் வடக்கு ஒன்றியக்  குழு சார்பில் வசூலிக்கப்பட்ட கட்சி  நிதி ரூ.4லட்சத்து 28ஆயிரத்து 120-ஐ  கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்  பெ.சண்முகத்திடம் அளிக்கப்பட் டது.  இதைத்தொடர்ந்து நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில், கட்சியின் மத் தியக்குழு உறுப்பினர் பெ.சண் முகம், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், வடக்கு ஒன்றியச் செய லாளர் ஆர்.காளியப்பன், முன் னாள் மாமன்ற உறுப்பினர் கே. மாரப்பன், பஞ்சாலை சங்க மாவட் டத் தலைவர் கே.பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் கே. வசந்தி ஆகியோர் பேசினர். இந்த பொதுக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் பெ.சண் முகம் பேசுகையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திரு நெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் பெய்த பலத்த மழையை பேரிடர் என்று அழைக்க முடியாது என்று கூறுகிறார். ஆயிரக்கணக்கான மக் கள் பெரும் பாதிப்பை சந்தித்து, மாநிலத்திற்கு பல கோடி ரூபாய்  இழப்பு ஏற்படுத்திய பெரும் மழையை பேரிடர் என்று அறிவித்து  தமிழ்நாடு கேட்ட நிதியை வழங்கு வதற்கு இவர்களுக்கு என்ன பிரச் சனை என்று தெரியவில்லை. இவர்களைப் பொறுத்தவரை நாடே அழிந்தால்தான் பேரிடர் என்று ஒப்புக் கொள்வார்கள் போல.  இந்த பேரிடரிலிருந்து மீண்டு வர  ரூ.37,000 கோடியை ஒன்றிய  அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டுள் ளது. மேலும், அமித்ஷாவிடம் வலி யுறுத்தியதற்கு ஜனவரி 27ஆம் தேதிக்குள் வழங்குவதாக உறுதி யளித்தார். ஆனால் இன்று வரை  ஒத்த ரூபாய் கூட வழங்கவில்லை.  தமிழ்நாடு அரசை பழிவாங்குவ தாக எண்ணி, தமிழ்நாடு மக்களை பழி வாங்குகிறார்கள். பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை என்ற பெயரில் நாடகம் நடத்திக்  கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட் டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு தர வேண்டும் என ஒரு முறை கூட கேட்கவில்லை. பல மாநி லங்களின் முதல்வர்கள் தில்லி யில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் தலை மையில் தில்லியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அதில்  பல்வேறு மாநிலங்களின் முதல மைச்சர்கள் பங்கேற்றனர். கர்நா டக மாநிலம் சார்பிலும் போராட் டம் நடைபெற்றது.

இந்தியாவில் தொழிலாளர்கள் போராடினார்கள், விவசாயிகள் போராடினார்கள், மாணவர்கள் போராடினார்கள், இளைஞர்கள் போராடினார்கள், இப்போது முதலமைச்சர்கள் போராடும் சூழலுக்கு ஒன்றிய மோடி தலைமையிலான அரசு தள்ளியுள்ளது. பாஜக ஆட்சி செய் யாத மாநிலங்களை திட்டமிட்டு பழி  வாங்குகிறார்கள். தமிழகத்திலி ருந்து 1 ரூபாய் ஒன்றிய அரசுக்கு அளித்தால், அவர்கள் திரும்பத் தருவது வெறும் 27 காசுதான். ஆனால் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்திற்கோ ரூ.2.20 காசு தரு கிறார்கள். தில்லியில் இரண்டு ஆண்டுகளாக போராடிய விவசா யிகளுக்கு அளித்த வாக்குறுதி களை நிறைவேற்ற கோரி விவசா யிகள் போராட்டத்தில் இறங்கி யுள்ளனர். அவர்கள் மீது துணை  இராணுவத்தை வைத்து கண்ணீர்  புகை வீசித் தாக்குகிறார்கள். இதில்  ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார். இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் வாழ்வதற்கான சுதந்திரத் தைக்கூட நாம் இழக்கக்கூடும். இந்த பாசிஸ்டுகளை வரும் தேர்த லில் இந்திய மக்கள் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவார்கள். இந்தியா கூட்டணி மாபெரும் வெற் றியை பெரும். தமிழகத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம்  வகிக்கும் கூட்டணி 39 தொகுதி களிலும் வெற்றி பெறும் என்று கூறி னார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச்செயலாளர் செ. முத்துகண்ணன் உட்பட ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை செய லாளர்கள், பொதுமக்கள் திரளா னோர் பங்கேற்றனர்.