districts

தமிழகத்திற்கு ஒன்றிய அரசு உரிய நிதியை வழங்கவில்லை

நாமக்கல், மார்ச் 30- தமிழகத்திற்கு ஒன்றிய அரசு உரிய  நிதியை வழங்கவில்லை என வெப்படை யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், மக் கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் குற் றச்சாட்டினார். ஈரோடு மக்களவை தொகுதியில் இந் தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக  வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து, ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி, வெப்படை பகுதியில் மக்கள் நீதி  மையம் தலைவர் கமலஹாசன் தேர்தல்  பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர்  பேசுகையில், திமுக தலைமையிலான தமிழ் நாடு அரசின் திட்டங்கள், அனைத்து தரப்பு  மக்களும் பயன்பெறும் வகையில் முன்னோ டியாக உள்ளது. தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில்  மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மக ளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி, பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஆகியவற்றை திமுக அரசு சிறப்பாக  செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழகத் திற்கு தேவையான நிதியை ஒன்றிய அரசு வழங்குவதில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காதது குறித்து திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மழை வெள்ளத்தில் பாதிப்பின்போது ஒன்றிய அரசு நிவாரண உதவி வழங்கவில்லை. சமையல் எரிவாயு  விலை உயர்ந்துவிட்டது. விவசாயிகளுக் கான திட்டங்களை பாஜக அரசு முறைப்படி  செயல்படுத்தவில்லை, என குற்றஞ்சாட்டி னார். மக்கள் நீதி மையத்தை பொருத்தவரை,  மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திமுகவுடன் கூட்டணி அமைத் துள்ளது. அரசியல் ஆதாயத்திற்கு அல்ல. அரசியலையும் தாண்டி பொதுமக்கள் நலன்  கருதியே ஜனநாயக சக்திகள் கூட்டணி அமைத்துள்ளன. எனவே, இந்தியா கூட்டணி  வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பேசினார். இந்நிநிகழ்ச்சியில் மாநில வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் உட்பட பலர் கலந்து கொண் டனர்.