கோவை, ஜூன் 12- கருமத்தம்பட்டி அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற் பட்டது. இதில், லாரியில் இருந்த மதுபாட்டில்கள் உடைந்து சாலையில் தண்ணீராக ஓடியது. சென்னை மதுபான நிறு வன குடோனில் இருந்து, கோவை பீளமேடு டாஸ்மாக் மதுபான கிடங்குக்கு மது பான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது.மது பான பெட்டிகளை ஏற்றிய லாரியை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செல் லப்பன் என்பவர் ஓட்டி வந்தார். லாரி புறவழிச்சாலையில் வந்து கொண்டி ருந்தபோது, கரும்பத்தம்பட்டி அருகே ஓட்டு நர் கட்டுப்பட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதையடுத்து, சாலை யில் சென்று கொண்டிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத் தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த கரு மத்தம்பட்டி போலீசார் காயமடைந்த ஓட்டு நரை மீட்டு, அவசர ஊர்தி மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் சேதமான மது பாட்டில்களை ஆய்வு செய்து அதன் மதிப்பை கணக்கிட்டனர். விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.