அரசர் காலம் முதல் தற்போதைய குடிமக்கள் காலம் வரையிலும் கண்ணாடிப்புத்தூர் சிற்றூரில் தொடர்ந்து உழைக்கும் மக்களுக்குக் குரல் கொடுக்கும் இயக்கத்தோழமைகள் இருந்து வந்துள்ளனர். இங்கு பொது வுடைமை இயக்கத் தலைவர்கள் ஜீவா, மணலி கந்தசாமி, ரமணி உட்பட பல தலைவர்கள் இந்த ஊருக்கு வந்து சென் றுள்ளனர். இந்த 20 ஆம் நூற்றாண்டில் எம்.எஸ். உஸ்மான் எனும் பொதுவுடைமைப் போராளி வர்க்கப் போராட்டங்களை முன் னின்று நடத்தி உழைக்கும் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். நிலமீட்பு, பஞ்சமி நிலமீட்பு தொடர்பாகப் பதிவு செய்யும் போது ஆயிரங்காலத்திற்கு முன்பே இந்த ஊர்க்கல்வெட் டில் அரசனை எதிர்த்துக் கேள்வி கேட்டதால் கொற்றவ னின் நிலம் பறிக்கப்பட்டு சோழமாதேவி கோயிலுக்குச் சேர்க் கப்பட்டதாகக் கடத்தூர் கொங்கவிடங்கீஸ்வரர் கோவில் கல் வெட்டு செய்திகள் கூறுகின்றன. ஆனால் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டு வரையிலும் இந்த ஊரில் நில உச்ச வரம்பில் அதிகளவு நிலங் கள் எடுக்கப்பட்டதும் இங்குதான். இங்கு வசித்த எம்.எஸ். உஸ்மான் எனும் பொதுவுடைமைப் போராளி இதற்கென மிகப்பெரிய பங்களிப்பினை செய்துள்ளார். இவர் பொதுத் தொகுதியான மடத்துக்குளம் பேரூராட்சி யில் தலைவராக நின்ற போது சிறுபான்மை சமூகத்தவராக இருந்தாலும் யாரும் இவரை எதிர்த்துப் போட்டியிட வில்லை. அந்தளவிற்கு மக்கள் செல்வாக்கோடு வாழ்ந்துள் ளார்.
மேலும், காங்கிரஸ் எனும் பேராயக் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்ட போது காமராசரே இங்கு வந்து உஸ்மானைப் பற்றி கேள்விபட்டு இவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தாமல் அன்னப்போஸ்ட் எனும் எதிர்ப்பில்லாத தலைவராக வெற்றி பெறச் செய்ததாக வும் இந்த ஊரின் முன்னோர்கள் கூறுகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கூட்டத்தில் உஸ் மான் அவர்கள் நின்றிருந்தால் இவர் கொண்டு வந்த மக்கள் பிரச்சனையை முதலில் முடித்து விட்டு அடுத்த கட்டப் பணிக ளுக்கே ஆட்சியர் செல்வார். செல்லவேண்டும். அந்தள விற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவரின் செல் வாக்கு இருந்தது. மேலும். இவர் செல்லும் போது பிரச்சி னைக்குரிய நபர்களையும் அழைத்துச்சென்று அந்தப் பிரச் சினை முடியும் வரை காத்திருப்பார் என்றும் கூறப்படுகி றது. 1958 க்குப் பிறகு 1965 வரையிலும் வினோபாவே நிலச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் மடத்துக்குளம், கண்ணாடிப்புத் தூர், கொமரலிங்கம், கல்லாபுரம் கடத்தூர் பகுதிகளில் பெரும்பாலான நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு நிலமில்லாத ஏழைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. அப்பொழுது தமிழ்நாட்டில் எங்குமில்லாத அளவுக்கு நமது கரைவளிப் பகுதியில்தான் அதிக நிலங்கள் மீட்டெடுத் ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு தோழர் உஸ்மானே முக் கியக்காரணம் என்றும் கூறப்படுகிறது. உஸ்மான் நூற்றுக்கும் மேற்பட்ட உழைப்பாளிகளோடு வயலில் ஏர் உழவு செய்து கொண்டிருந்தபோது, அப்போ தைய கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்து இந்திய துணை ராணுவப்படை (ரெஜிமெண்ட்) 10 கம்பெனிகள் எனும் 120 ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் எதிர்த்து வந்த போதும், நெஞ்சுரம் மிக்க உஸ்மான் கலங்காது, நடுங்காது எதிர்த்து நின்ற செயல் இன்றளவும் கண்ணாடிப்புத்தூர் மக்களிடம் கனலாக நின்றெரிகிறது. ‘இது மக்களுக்கான நிலம், அரசின் உத்தரவுப்படி ஏழை மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட நிலம், இதில் உழுவது எங் களது உரிமை, நீங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதென் றால் முதலில் என்னைச் சுட்டுவிட்டு பிறகு வயலில் இறங்குங் கள்’ என்று சொன்ன போது நூற்றுக்கணக்கான உழைப்பாளி மக்கள் இவர் பின் நின்று ஆதரவுக் குரல் கொடுத்ததையும் இன்றளவும் நினைவு கூர்ந்து பேசுகின்றனர். அப்பொழுது அந்த இராணுவ வண்டிகளும், ராணுவ வீரர்களும் பின் னோக்கி நகர்ந்து சென்றது,
உஸ் மானின் போராட்ட வரலாறு. உஸ்மான் கடைசியாக ருத்திரா பாளையம் கூட்டத்தில் பேசிவிட்டு வந்து உடல்நிலை சரியில்லை என்று படுத்தவர் எழுந்திருக்கவே இல்லை. அவர் உயிர் நீத்த வுடன் அவரது உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய வீட்டைவிட்டு வெளியே கொண்டு வந்ததும் அந்த ஊர் மக்கள் உஸ்மான் ஊருக்குச் சொந்தமானவர். உங்க ளுக்கு மட்டும் சொந்தம் கொண்டாடக்கூடிய நபர் அல்ல. எனவே, அவரை ஊருக்குள் பொதுவான இடத்தில் அடக் கம் செய்ய வேண்டும் என்று ஊர்ப்பொதுமக்கள் அனைவ ரும் முன்னின்று செங்கொடி ஏந்தி உரிமை முழக்கமிட்டு உஸ் மானை மனதில் நிறுத்தி ஊருக்கு நடுவே மண்ணில் புதைத்த னர். அவர் இறந்து 40 ஆண்டுகளுக்கும் மேலானாலும், இன்று வரையிலும் கண்ணாடிப்புத்தூர் வடக்கு தெற்கு எனப் பெய ரளவில் பிரிந்திருந்தாலும் உஸ்மான் நகர் எனும் பெய ரில் இன்றளவும் அனைத்து பொதுமக்களும் ஒற்றுமையு டன் வசித்து வருகின்றனர். இன்று அந்த ஊர் மக்கள் அனைவ ரும் உழைப்பாளிகள் தினமான இன்று மே 1 முதல் நாள் அனைத்து மக்களும் தம் மக்களின் உயிராதாரம் காத் திட்ட உஸ்மானை இன்றளவும் நினைவு கூர்ந்து ஊருக்கு மத்தியில் அமைக்கப்பட்ட அவரின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்குகின்றனர். இன்று மே 1 உழைப்பாளிகள் தினம், வழக்கம் போல் இன்றும் கண்ணாடிப்புத்தூர் ஊர்ப்பொதுமக்கள் உழைப்பா ளிகளின் தோழமை உஸ்மானின் நினைவால் நாமும் செங் கொடி ஏந்துவோம். உடுமலை வரலாற்று நூலில் உஸ்மான் குறித்து பின்வரு மாறு பதிவு செய்துள்ளனர்.
கலக்கம் இல்லாத அறிவை உடையவர். தம் செயல்க ளுக்கு இடையூறு ஏற்பட்டாலும், எதிர்த்து நின்று செயல் செய்யும் குணமுடையவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி யாக இருந்த காலத்தில், 1962 ஆம் ஆண்டு 64 வருவாய் கிராமக் கொத்துக்காரர்களை ஒன்றுபடுத்தி 60 க்கு 40 என் னும் கூலி முறையை அமுல் படுத்தியவர். விவசாயக் கூலிக ளுக்கு முதன் முதலாகக் குரல் கொடுத்து கூலி உயர் வைப் பெற்றுத் தந்தவர். கடத்தூர் தாண்டாமஞ்சிக் களத்தில் முதலாளிகளுக்கு ஒரு வல்லம், கூலிகளுக்கு ஒரு வல் லம், கொத்துக்காரர்களுக்கு ஒரு வல்லம் என தனித்த னியாக அளவு முறை இருந்ததை மாற்றி ஒரே அளவு முறை யைக் கொண்டு வந்தவர். வயல் வெளி களத்து மேடுக ளில் தீண்டாமை இருந்ததைச் சுட்டிக்காட்டி சமத்துவம் நிலை பெற போராடியவர். உஸ்மான் மறைந்த போது ஊர்ப்பொதுமக்களே அவரை சுமந்துகொண்டு ஊரின் பொதுவான இடத்தில் புதைத்து அவ ருக்காக ஒரு சிறு நினைவு மண்டபத்தையும் கட்டியுள்ள னர். இங்கு ஒவ்வொரு மே 1 ஆம் தேதியும் பொதுவு டைமை கொடியேற்றப்பட்டு அவருக்கு மரியாதை செய்யப் படுகிறது. செய்தி: உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்