நாமக்கல், ஜன. 8- பள்ளிபாளையத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீ சாரிடம் அளித்த புகாரை அடுத்து, அங்குள்ள சிசிடிவி காட்சி களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காகித ஆலை செல் லும் சாலையில் உள்ள வ.ஊ.சி. நகர் பகுதியில், சமயபுரத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறு வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் கோவில் பூசாரி சரவணன்(47) என்பவர் வழக்கம் போல கோவில் பணி களை முடித்துவிட்டு, ஞாயிறன்று இரவு கோவிலை பூட்டி சென்றார். திங்களன்று அதிகாலை 4:30 மணிக்கு கோவிலை திறக்க வந்தவர், கோவில் கதவின் பூட்டை உடைக்கப்பட்டு, உள்ளே உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட் டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவிலில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த பொழுது, அதில், 30 வயதுக்குட்பட்ட இளைஞர் ஒருவர் அதிகாலை இரண்டு மணி அளவில், கையில் கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் கோவில் கதவின் பூட்டை உடைத்தும், உண்டியலை உடைத்து, பணத்தை எடுத்து, துணிக்குள் மூட்டை கட்டிக்கொண்டு வெளியே சென்று சென்றது தெரியவந்தது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கோவில் உண்டியலில் இருந்து, சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரை பணம் கொள்ளை போயிருக் கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாக குழுவினர் பள்ளிபாளை யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு இதுகு றித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொள்ளையில் ஈடுபடும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.