districts

img

தேசிய கல்விக்கொள்கை – 2020ஐ திரும்பப்பெறு ஒன்றிய அரசை கண்டித்து ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 22- மாணவர்களின் நலனை பாதிக்கும் தேசிய கல்விக்கொள்கை 2020ஐ ஒன் றிய அரசு திரும்ப பெற வேண்டும், தமி ழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி சார்பில் சேலத்தில் வட்டார  கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். தமிழகத் தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் களுக்கு, ஒன்றிய அரசு ஆசிரியர்க ளுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கை –  2020ஐ ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். அரசு பள்ளிகளில் தற்கா லிக ஆசிரியர் நியமனம் செய்யும் முறை யினை தமிழக அரசு கைவிட்டு, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக தாரமங்க லம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் நல்லம்மாள், முன்னாள் மாவட்ட பொருளாளர் ரமேஷ், வட்டார செயலாளர் சரவணன், வட்டார பொரு ளாளர் அழகுமணி உள்ளிட்ட ஏராள மான ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர். இதேபோல் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராள மானோர் கலந்து கொண்டு, கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.