districts

img

பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் அனுப்பும் பணி விரைவில் முடியும்

தருமபுரி, ஜூன் 11- பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் அனுப்பும் பணி ஓரிரு நாட்களில் முடியும் என தமிழ்நாடு பாடநூல் இயக்குநர் கண்ணப்பன் தருமபுரி யில் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.  தருமபுரி மாவட்டம், பென்னா கரம் அருகே பி.அக்ராஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகழ் ஆண் டிற்கான மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியினை தமிழ்நாடு பாடநூல் இயக்குனரும், கல்வியியல் பணிகள் கழக செய லருமான கண்ணப்பன் ஆய்வு  மேற்கொண்டார். அதன்பின் பென் னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்ற எண்ணும் எழுத் தும் பயிற்சியினை ஆய்வு மேற் கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தொடக்கப் பள்ளி மாணவர்கள் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சரிசெய்து கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தப்படும் என சட்டப் பேரவையில் நிதியமைச்சர் அறி விப்பை வெளியிட்டு இருந்தார். அதன்பேரில் தமிழகம் முழுவதிலும் இப்பயிற்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தருமபுரி மாவட்டத் தில் தருமபுரி, பாலக்கோடு, காரி மங்கலம், மொரப்பூர், நல்லம் பள்ளி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப் பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட வட் டாரங்களில் நடைபெற்று வருகி றது.  மாவட்டம் முழுவதிலும் ஆயி ரத்து 438 தொடக்கப்பள்ளி ஆசிரி யர்கள் கலந்து கொண்டு, பயிற்சி பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ளதால் தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தூய்மை, அடிப் படை வசதிகள் குறித்து ஆய்வு  செய்ய வேண்டும் என சுற்றறிக்கை  அனுப்பியுள்ளார். அதனடிப்படை யில் பாலக்கோடு, காரிமங்கலம், பி. அக்ரஹாரம், பென்னாகரம் பகுதி களில் உள்ள மேல்நிலைப்பள்ளி யில் ஆய்வு மேற்கொண்டதில், பள்ளி வளாகம், வகுப்பறை, கரும் பலகை, குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் நிறைவாக உள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து பெறப்பட்டு கல்வி மாவட்ட அளவிலான விநியோக மையங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த பாடநூல்களை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஓரிரு நாட்க ளுக்குள் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் தருமபுரி மாவட்டம்  கல்வியில் முன்னோடி மாவட்டமாக திகழும் என தெரிவித்தார்.  முன்னதாக, இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் குணசேகரன், மாவட்ட  கல்வி அலுவலர் ராஜகோபால், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் சீனிவாசன், பள்ளி ஆய்வாளர் இளமுருகன் ஆகியோர் உடனிருந் தனர்.