districts

img

தமிழ்நாடு மாலைவாழ் மக்கள் சங்கம் 30 ஆண்டு கால தொடர் போராட்டத்தால் நிருபித்தது

வனத்துறையினரின், திருடர் என்ற பழி சொல்லில் இருந்து வாச்சத்தி மக்கள் குற்றமற்றவர்கள் என தமிழ்நாடு மாலைவாழ் மக்கள் சங்கம் 30 ஆண்டு கால தொடர் போராட்டத்தால் நிருபித்தது, இதன்தொடர்ச்சியாக, வாச்சாத்தி வழக்கு வெற்றிகொடியேற்றுதல் மற்றும் பெயர்ப்பலகை திறப்புவிழா வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு, பொதுச்செயலாளர் இரா.சரவணன், மாவட்டத் தலைவர் ஏ.அம்புரோஸ், மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மாநிலதுணைச்செயலாளர் ஏ.கண்ணகி, மலைசங்க பொறுப்பாளர் எஸ்.கே.கோவிந்தன், வாச்சாத்தி தலைவர் ஆர்.செல்வி, செயலாளர் ஆர்.சசிகுமார், பொருளாளர் சிவநந்தினி மற்றும் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.