districts

img

தொடர் மழையால் வரத்து குறைந்தது தக்காளி விலை கிடு கிடு உயர்வு

கோவை, மே 15- தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், தக்காளி விலை வேகமாக உயர்ந்து வருகி றது. வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் தமிழகத்தின் பெரும் பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால், காய்கறி உற் பத்தி சரிந்துள்ளது. குறிப்பாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப் பட்டு, சந்தைகளுக்கு வரத்து குறைந் துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை இரண்டு மடங்காக உயர்ந்துள் ளது. கோவையில் கடந்த வாரங்களில் கிலோ ரூ.30 முதல் ரூ.40க்கு விற்பனை  செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது  ரூ.70க்கு விற்பனை செய்யப்படு கிறது. உழவர் சந்தைகளில் ரூ.66  முதல் ரூ.68க்கு விற்பனை செய்யப்படு கிறது. இதுகுறித்து காய்கறி வியாபாரி கள் கூறுகையில், மதுக்கரை, கிணத் துக்கடவு, பொள்ளாச்சி (தெற்கு), சுல்தான்பேட்டை, காரமடை வட்டா ரங்களில் தக்காளி சாகுபடி அதிக அள வில் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தக்காளி வரத்து காணப்படும். இங்கிருந்து கேர ளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஒரு வார மாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக் கப்பட்டுள்ளது. இதனால் விலை  உயர்ந்துள்ளது, என்றனர்.

;