districts

img

குறித்த நேரத்திற்கு வரவில்லை: பேருந்தை சிறைபிடித்த மாணவர்கள்

கோவை, நவ.14- சூலூர் அருகே உள்ள நல்லூர் பாளையம் கிராமத்தில் குறித்த நேரத் துக்கு பேருந்துகள் இயக்கப்படா ததை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூரை அடுத்த நல்லூர்பாளையம் கிராமத் தில் ஆயிரக்கணக்கான குடும்பங் கள் வசித்து வருகின்றன. இப்பகுதி யிலிருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வேலைக்கு செல்வோர் பேருந்துகளை பயன் படுத்தி வருகின்றனர். வழித்தடம் எண் 6 மற்றும் வழித்தடம் எண் 105 ஆகிய இரண்டு பேருந்துகள் மட் டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு பேருந்துகளும் குறித்த நேரத்துக்கு இயக்கப்படாமல் அப் பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு  உள்ளாகினர். இதனைக் கண்டித்து திங்களன்று நல்லூர்பாளையம் பகு தியில் பேருந்துகளை சிறைபிடித்து,  பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ,  மாணவிகள் சாலை மறியலில் ஈடு பட்டனர். பள்ளிக்கு செல்வதற்கு 8 மணிக்கு வரவேண்டிய பேருந்து ஒரு மணி நேரம் தாமதமாகவும், மாலையில் 4 மணிக்கு வரவேண்டிய பேருந்து ஒரு  மணி நேரத்துக்கு மேலாக தாமத மாக வருவதும் சில சமயங்களில் பேருந்துகள் வருவதில்லை எனவும்  மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ள னர். இதுதொடர்பாக சூலூர் கோட்ட அதிகாரிகள் மற்றும் சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் உள்ள  காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை வரு வாய்த்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் வராத நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் மாணவர்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.