districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரூ.35 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

நாமக்கல், பிப்.6- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க ஆர்.கவுண்டம்பாளை யம் விற்பனை மையத்தில் திங்களன்று பருத்தி ஏலம் நடை பெற்றது. 1438 மூட்டை பருத்தியை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில் ஆர்சிஎச் ரகம் ஆர்சிஹெச் அதிக பட்சமாக குவிண்டால் ரூ.7401க்கும், குறைந்தபட்சமாக ரூ.6889க்கும், கொட்டுரகம் அதிகபட்சமாக ரூ.5295க்கும், குறைந்தபட்சமாக ரூ.3595க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.35 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

இலவச வேட்டி, சேலை கிடைக்க வேண்டும்

சேலம், பிப்.6- அனைத்து ரேசன் கார்டுதாரர் களுக்கும் இலவச வேட்டி, சேலை கிடைத்திட வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை வழங்க அரசு உத்தரவிட்டது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகாவில், 84 ரேசன் கடைகள் மூலம் 42,725 கார்டுதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோருக்கு வேட்டி, சேலை வழங்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கெங்கவல்லி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகள் மூலம் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை முழுமையாக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரேசன் கடை ஊழியர்கள் கூறுகையில், ஆயிரம் கார்டுகள் உள்ள கடைகளுக்கு 70 சதவிகித பேருக்கு மட்டுமே வேட்டி, சேலைகள் வந்துள்ளன. இதனால், அனைவருக்கும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக தினந்தோறும் மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர், என்றனர்.

மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை

சேலம், பிப்.6- கெங்கவல்லி அருகே உள்ள தகரப்புதூரில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ளது தகரப் புதூர் ஊராட்சி. தம்மம்பட்டியிலிருந்து கெங்கவல்லி செல் லும் வழியிலுள்ள இந்த ஊராட்சியின் எல்லையானது, ஒரு சிற்றோடை செல்லும் தரைப்பாலத்துடன் முடிவடைகிறது. அந்த ஓடைக்கு கிழக்குப்புறம் கூடமலை ஊராட்சி தொடங்கு கிறது. இதில் ஓடையின் மேல் செல்லும் தரைப்பாலத்தில் போடப்பட்டுள்ள தார்ச்சாலையானது, ‘எஸ்’ வடிவில் மிகுந்த  வளைவில் செல்கிறது. இதனால் அந்த வளையில் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. இரவில் புதிதாக இப்பகுதிக்கு வாகனத்தில் வருவோர் வளைவில் சரியாகத் திருப்பாமல் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, இந்த சிற்றோடையின் மேல் 7 அடி உயர மேம்பாலம் அமைத்தால், பெரம்பலூர், சேலம், ஆத்தூர் மார்க்கங்களில் செல்வோருக்கு மிகவும்  பயனுள்ளதாக இருக்கும். எனவே, தகரப்புதூர் சிற்றோடை யில் விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெரு நாய் தொல்லை: ஹவுஸிங் யூனிட் பொதுமக்கள் வேதனை

திருப்பூர், பிப்.6- தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தாத முதலிபா ளையம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து ஹவுஸிங் யூனிட் பொதுமக்கள் தட்டி வைத்துள்ளனர். முதலிபாளையம் பஞ்சாயத்து ஹவுஸிங் யூனிட் பகுதியில்  தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. இதனால்  பள்ளிக் குழந்தைகள், வாகன ஓட்டிகள், முதியோர்கள், மாற் றுத்திறனாளிகள் என பலதரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதலிபாளையம்  கிராம சபை கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. பலமுறை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறி ஹவுசிங் யூனிட் பொதுமக்கள் மாவட்ட  நிர்வாகம் மற்றும் முதலிபாளையம் பஞ்சாயத்து நிர்வா கத்தை கண்டித்தும் சாலையில் தட்டி வைத்துள்ளனர். அதில்  15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

காவலர்களை அருவறுக்கத்தக்க வகையில் பேசும் இந்து சாம்ராஜ்ய நிறுவனர் 

அவிநாசி, பிப்.6- திருப்பூரில் மது போதையில் இந்து அமைப்பு நிறுவனர்  ஒருவர் ஆய்வாளர் மற்றும் காவலர்களை அருவறுக்கத் தக்க வகையில் பேசும் வீடியோ, ஆடியோ ஆகியவை சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடி யோவில், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு மது  போதையில் வந்து பேசிய அகில பாரத இந்து சாம்ராஜ்ய நிறு வனர் செந்தில்குமார் எம்.பி.ஆ.ராசாவை தகாத வார்த்தை யால் திட்டியுள்ளார். மேலும், காவல் நிலையத்தில் கிறிஸ்த வர்களும் முஸ்லிமும் தான் பணியாற்றுகிறீர்களா என போதை யில் பேசியுள்ளார். காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீ சார் செந்தில்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள் ளனர். அதேபோல அதே காவல்  நிலையத்தைச் சேர்ந்த போலீ சார் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை தரக்குறைவாக பேசும் ஆடியோவும் வைரலாகி வரு கிறது. அதில் போலீசாருக்கு நான் தான் மாமூல் வாங்கி கொடுக்கிறேன். நானும் கட்சி நிதி என்ற பெயரில் மாமூல் வாங் கிக் கொள்கிறேன். என்னை டாஸ்மாக் கடையில் மிரட்டியவர்  மீது நடவடிக்கை எடுக்க கைலாகாத காவல்துறை என பேசி  வசைபாடும் ஆடியோவும், மேலும் சில ஆடியோக்களில் ஆட்சி யர் பற்றியும், வட்டாட்சியர் பற்றியும் மாமூல் வாங்க வந்த ஆட் சியர் என மது போதையில் தகாத வார்த்தைகளில் பேசும் ஆடி யோவும் பரவு வருகிறது.

தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுகவினர்  இருப்பை காட்டிக்கொள்ளப் போராட்டம் நடத்துகிறார்கள்

திருப்பூர், பிப்.6- தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுகவி னர் தங்கள் இருப்பை காட்டிக் கொள்வதற் காக போராட்டங்களை நடத்தி வருவதாக வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத் தலைவர்  கார்த்திகேய சிவசேனாதிபதி குற்றம் சாட்டி னார். திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல். ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை, வேதியியல் துறை உட்பட பல் வேறு பிரிவுகளின் சார்பில் கண்காட்சி ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. இதை வெளிநாடு வாழ்  தமிழர் நலவாரியத் தலைவர் கார்த்திகேய சிவ சேனதிபதி நேரில் பார்வையிட்டு மாணவி களை பாராட்டினார். இதைதொடர்ந்து  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  அவர் கூறியதாவது, அத்திக்கடவு அவினாசி  திட்டம் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது  அவசரக்கதியில் தொடங்கப்பட்டது. எந்த ஒரு  திட்டத்தை செயல்படுத்தினாலும் அதனை  முழுமையாக செயல்படுத்த வேண்டும் என் பது தான் திமுகவின் நோக்கம். கேரளாவிலி ருந்து வரும் தண்ணீர் வீணாகாமல் அத்திக்க டவு அவினாசி திட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தை மாற்றி அதிமுக  அரசு செயல்படுத்த துவங்கியது. கோவை யில் பொறுப்பு அமைச்சராக உள்ள முத் துசாமி விவசாயிகள் முன்வைக்கும் கோரிக் கைகள் கேட்டறிந்து முதல்வரிடம் தெரிவித் துள்ளார். விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.  அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது  என்பதற்காக எந்த ஒரு திட்டத்தையும் திமுக ஆட்சி கிடப்பில் போட்டதில்லை. தேர்தல் நெருங்கி வருவதால் அதிமுகவினர் தங்கள்  இருப்பை காட்டிக் கொள்வதற்காக போராட் டங்கள் அறிவித்து வருவதாக குற்றம் சாட்டி னார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கடந்த முறை கைவிட்ட தேனி  தொகுதியையும் சேர்த்து புதுச்சேரி உட்பட  40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்திய  கூட்டணி ஆட்சி அமைத்து இந்திய அளவில்  ஒரு மாற்றத்தை உருவாக்கும். தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித் தார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக்கூறி நூல் வியாபாரியிடம் ரூ.1.69 கோடி கொள்ளை: எட்டு பேர் கைது

திருப்பூர், பிப். 6 - திருப்பூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக் கூறி நூல் வியா பாரியிடம் ரூ.1.69 கோடி ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலை காவல் துறையி னர் துரித விசாரணை நடத்தி கைது  செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.10 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற் றும் பொருட்கள் மீட்கப்பட்டது. திருப்பூர் நகரின் மையப்பகுதி யில் செரீப்காலனி முன்பாக அங்கு ராஜ் என்பர் நூல் கமிசன் கடை வைத்து வியாபாரம் செய்து வருகி றார். அவரது நண்பர்கள் மூலம் அறி முகமான விஜய் கார்த்திக் என்ற நபர்  ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் நிர்வாக  இயக்குனர்களில் ஒருவராக இருப்ப தாகக் கூறியிருக்கிறார். தங்களது நிறுவன வங்கி கணக்கில் கோடிக்க ணக்கான ரூபாய் பணம் இருப்பதாக வும், தற்போது கோவை, திருப்பூர்,  ஈரோடு போன்ற ஊர்களில் நிறுவ னத்தின் சார்பில் பெரிய அளவில் கட் டுமான பணி நடைபெற்று வருவதா கவும் அதற்குண்டான பில்டிங் மெட்டீ ரியல் மற்றும் இதர செலவுகளுக்கு  ரொக்கப்பணம் தேவைப்படுவதாக வும், அந்த பணத்திற்கு கம்பெனியி லிருந்து இரண்டு மடங்கு பணம் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய் யப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். இதை நம்பி அங்குராஜ், அவரது  நண்பர் இருவரும் தங்களுக்கு தெரிந்த வேறு சில நபர்களிடம் ஒரு 1. 69 கோடி பணம் ரொக்கமாக பெற்று  தங்கள் அலுவலகத்தில் வைத்து கடந்த ஜனவரி 30ஆம் தேதி விஜய் கார்த்திக்கிற்கு வீடியோ கால் செய்து  பணத்தை காட்டியுள்ளனர். இதற்கு  பின் சிறிது நேரம் கழித்து நூல் கடைக்கு வந்த ஐந்து நபர்கள் கொண்ட கும்பல் தாங்கள் அமலாக்கத் துறையைச் சேர்ந்த வர்கள் என அறிமுகம் செய்து  விசாரணை நடத்தினர். கணக்கில்  வராத பணம் எப்படி வந்தது என கேள்வி எழுப்பி, கடையில் இருந்த  ரூ.1.69 கோடி பணத்தை எடுத்துக் கொண்டனர். அத்துடன் கடையில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கழற்றிக் கொண்டு, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவல கத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி நேரில் வந்து கணக்கு காட்டி பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறி விட்டுச் சென்றனர். இதன் பிறகு சிறிது நேரத்தில் தான்  ஏமாற்றப்பட்டதை அறிந்த அங்கு ராஜ் திருப்பூர் தெற்கு காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இந்த புகா ரின் அடிப்படையில் நான்கு தனிப் படை அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை காவல்துறையினர் வழக்கில் சம்பந்தப்பட்ட விஜய் கார்த்தி, நரேந்திரநாத், ராஜசேகர், லோகநாதன் மற்றும் கோபிநாத் ஆகிய ஐவரைக் கைது செய்தனர். அவர்களி்டம் இருந்து மூன்று கார், செல்போன் உள்பட ரூ.1.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்தைக் கைப்பற்றினர். இந்நிலையில் செவ்வாயன்று இந்த கொள்ளைச் சம்பவம் தொடர் பாக மேலும் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சாலையை சீரமைத்து தரக்கோரி நாற்று நடும் போராட்டம்

திருப்பூர், பிப்.6- திருப்பூர் காவிலிபாளையம் அருள்ஜோதி நகர் பகுதியில்  சாலையை சீரமைத்து தர கோரி செவ்வாயன்று பொதுமக்கள்  நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி மேயரிடம்  மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லூரி சாலையில் உள்ள காவிலிப்பாளையம் அருள்ஜோதி நகர் பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கல்லூரி சாலையில் இருந்து காவிலிப்பாளையம் பகுதிக்கு  செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்திற்கு அடியே உள்ள பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். அப்பாதையில் எப் பொழுதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும்  வாகன ஓட்டிகள் சிரமதிற்கு உள்ளாகின்றனர். பலமுறை மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித் தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி  பொதுமக்கள் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று  நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்ப டுத்தினர். இதைதொடர்ந்து இதே கோரிக்கையை வலியு றுத்தி மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து  சாலையை சீரமைத்து தருவதோடு தங்கள் பகுதிக்கான குடி நீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என மனு அளித் தனர்.

வேலை கேட்டு வந்தவர் கொலை: நால்வருக்கு ஆயுள்

திருப்பூர், பிப்.6 – உத்தரபிரதேச மாநிலம் கர்ஷியோரா மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 23).  அவருடைய தம்பி பிரேஜ் லால் (20) ஆகி யோர் வேலைவாய்ப்பு கேட்டு பல்லடத்தில்  உள்ள தனியார் வேலைவாய்ப்பு ஏஜென் சிக்கு வந்தனர். அந்த அலுவலகத்தில் கேரள  மாநிலம் கண்ணூரை சேர்ந்த ராஜேஷ் புஜாரி  (31), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியை சேர்ந்த நிர்மல்குமார் (35), விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விஜய்பாலாஜி (36), கிருஷ்ணகிரி மாவட் டம் காவேரிபட்டினத்தை சேர்ந்த முகமது சுபேர் (25) ஆகியோர் ஊழியர்களாக வேலை  செய்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல்  7 அன்று ராஜ்குமார், பிரேஜ்லால் இருவ ரையும் நாமக்கல்லில் வேலைக்குச் சேர உடனே புறப்படும்படி கூறியுள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ராஜ்குமார், பிரேஜ் லால் இருவரையும் மேற்படி நால்வரும் கடு மையாக தாக்கினர். இதில் ராஜ்குமார் உயிரி ழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மங்கலம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்பு ஜாரி, நிர்மல்குமார், விஜய்பாலாஜி, முகமது  சுபேர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந் தது. செவ்வாயன்று இந்த வழக்கில் தீர்ப்பு  கூறப்பட்டது. நான்கு பேருக்கும் தலா ஆயுள்  தண்டனை, ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து  நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

சாலைப் பாதுகாப்பு மாத விழா காவலர்கள் விழிப்புணர்வு பேரணி

கோபி, பிப்.6- கோபிசெட்டிபாளையத்தில், தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை ஒட்டி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தேசிய  சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி கோபி காவல் துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இதில், காவலர்கள், போக்குவரத்து காவலர் கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தலைகவசம் அணிந்த படி இருசக்கர வாகனத்தில் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக பேரணியாக சென்றனர். சாலை விதிகளை கடை பிடிக்கவும், தலைகவசம் அணியவும், செல்போன் பேசிய படியும், மதுஅருந்தி விட்டு வாகனத்தை இயக்கக் கூடாது,  காரில் செல்லும்போது கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சாலைப் பாதுகாப்பு விதி முறைகளை வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்கு வரத்து காவல் ஆய்வாளர் ஞானவேல், உதவி ஆய்வா ளர்கள்  தண்டபாணி, பிரபாகரன், மணிகண்டன் காவலர்கள்  நாகராஜ் என பலர் கலந்து கொண்டனர்.

தவறாக பட்டா வழங்கியதாக புகார்
ஈரோடு, பிப். 6- முறையாக வரி செலுத்தி வசித்து வரும் எங்கள் நிலத்திற்கு தவறாக பட்டா வழங்கி, எங்களை வெளி யேற்ற முயற்சி நடக்கிறது. இது தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நம்பியூர் தாலுகா எலத்தூர் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா எலத்தூர், பழைய அரிஜன காலனியைச் சேர்ந்த பொதுமக்கள், குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த மனுவில், எலத்தூர், பழைய அரிஜன காலனியில் எங்களது முன்னோர்கள் கடந்த  80 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வந்தனர். 3ஆவது தலைமுறையாக நாங்கள் வசித்து வருகிறோம். இந்நி லையில், கடந்த 2ஆம் தேதி எங்கள் பகுதிக்குள் நுழைந்த சிலர், ஜேசிபி இயந்திரம் மூலமாக நாங்கள் வசிக்கும் இடத்தை  சுத்தம் செய்து, ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். சில சுவர் களையும், இடித்து சேதப்படுத்திவிட்டனர். ஆக்கிரமிப்பு செய்ய முயன்றவர்கள், தங்களிடம் ஆவணங்கள் இருப்பதா கவும், மண்டல துணை தாசில்தார் பட்டா மாறுதல் உத்த ரவு வழங்கி உள்ளதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து, கடத்தூர் போலீஸில் புகார் தெரிவித்துள் ளோம். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் இருக்கும் இடத்துக்கு முறையாக  சொத்து வரி, மின் கட்டணம் செலுத்துகிறோம். பிற ஆவணங்க ளும் உள்ளன. எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை  நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டுள் ளனர்.

ரூ.2 லட்சம் திருட்டு - 3 ஆண்டு சிறை

உதகை,பிப்.6- உதகையில் கியாஸ் ஏஜென்சி நிறுவனத் தில் ரூ.2 லட்சம் திருடிய வழக்கில் வாலி பருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து  உதகை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம் உதகையில் பாரத் கியாஸ் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 28-8-2022 தேதியன்று கியாஸ் ஏஜென்சி நிறுவனம் வேலை நேரம் முடிந்ததும் வழக்கம்போல் பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். இதைத்தொடர்ந்து மறுநாள் காலையில் ஊழியர்கள் அலுவலகம் வந்தபோது கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பது தெரிய வந்தது. பின்பு தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேற்பார்வையாளர் ரவீந்திரன் உள்ளே சென்று பார்வையிட்டார். அதில்  மேஜையில் இருந்த ரூ.2,78,570 திருடு போய்  இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரவீந்திரன் உதகை மத்திய காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் போலீசார் தனியார் விடுதி யில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டி ருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகை யில் தங்கி இருந்த வாலிபர் ஒருவர் பிடித்து  விசாரணை நடத்தினர். இதில் அவர் திரு நெல்வேலி மாவட்டம் பாளையங்கோட் டையைச் சேர்ந்த மகாராஜா(26) என்பதும், கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த இவ ருக்கு வருமானம் போதவில்லை என்பதால் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.  மேலும் உதகையில் உள்ள  கியாஸ் பாரத்  கியாஸ் நிறுவனத்திற்குள் கதவை உடைத்து  உள்ளே புகுந்து அங்கிருந்த பணத்தை திரு டியதும் இவர்தான் என்பது தெரியவந்தது. இதேபோல் இவர் மீது நெல்லை மற்றும் உதகையில் கேத்தி காவல் நிலையம்  உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு  வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுது. இந்நிலையில் திங்களன்று தீர்ப்பு கூறப்பட்டு மாகாராஜாவுக்கு 3  ஆண்டு சிறை தண்டனையும், 100 ரூபாய்  அபராதமும் விதித்து  நீதிபதி தமிழ் இனியன்  உத்தரவிட்டார். பின்பு மகாராஜாவை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

நிலுவை சம்பள பாக்கியை வழங்கிடுக 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மனு

ஈரோடு, பிப். 6- 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி செய்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, மனு அளித்தனர்.  ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா வைர மங்கலம், குட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள், குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தனர். அதில், எங்கள் ஊராட்சியில், 100 நாள் வேலை திட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறோம். இதில், ஒரு நபருக்கு ரூ. 280 நாளொன்று ஊதியமாக வழங்க வேண்டும். இந்த நிலையில், கடந்த  3 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங் கவில்லை. எனவே, தங்களுக்கு ஊதியம்  வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கைதிகள் 6 பேர் விடுதலை

கோவை, பிப்.6- நன்னடத்தை அடிப்படையில் கோவை சிறையில் இருந்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கைதி கள் 6 பேரை தமிழ்நாடு அரசு விடுவித் தது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை  முன்னிட்டு ஆண்டுதோறும் நீண்ட காலம் சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வரும் தண்டனை கைதிகள், நன்னடைத்தை அடிப்படையில் விடு விக்கப்படுவது வழக்கம். இந்நிலை யில், தமிழக அரசு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 15.9.23 ஆம்  தேதி விடுவிக்க, கோவை சிறை கைதி கள் ஆறு பேர் உட்பட தமிழகம் முழுவ தும் உள்ள சிறைகளில் இருந்து 12 சிறை கைதிகள் பட்டியலை ஆளுந ருக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த  கோப்பு பல மாதங்களாக நிலுவை யில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆளுநர் கைதிகளை விடு விக்க அனுமதி அளித்தார்.  இதனைடுத்து கடலூர், கோவை, சென்னை, வேலூர் ஆகிய நான்கு  சிறைகளில் இருந்து 12 சிறை கைதி கள் செவ்வாயன்று விடுவிக்கப்பட் டுள்ளனர். இவர்களில் கோவை சிறை யில் நீண்ட காலமாக ஆயுள் தண்டனை  அனுபவித்து வந்த விஸ்வநாதன், பூரிக மல், அபுதாஹிர், ஹாருன் பாட்ஷா, சாகுல் ஹமீது, ஊமைல் பாபு ஆகிய 6  பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர் கள் ஆறு பேருக்கும் கடந்த ஒரு மாத மாக பரோல் வழங்கப்பட்டு அவர வர் வீடுகளில் இருந்தனர். இந்நிலை யில் ஆளுநர் உத்தரவு கிடைக்கப் பட்ட நிலையில், ஆறு பேரும் கோவை  மத்திய சிறைக்குச் சென்று கையெழுத் திட்டு முறைப்படி விடுதலையானர். ஆறு பேரும் வெவ்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, நீண்ட வருடமாக சிறை யில் ஆயுள் தண்டணையுடன் இருந்து  வந்த நிலையில் விடுவிக்கபட்டுள்ளனர்.

காவலர்களுக்கு சிறப்பு பரிசு

கோவை, பிப்.6- கோவை காவல் சரகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 21  பீட் அதிகாரிகளுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. கோவை சரகத்தில் குற்றங்களைத் தடுக்கவும், சட்டம்  ஒழுங்கைப் பாதுகாக்கவும் காவல்துறை துணைத் தலைவர்  ஆ.சரவணசுந்தர் உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு செப்டம் பர் மாதம் காவல்துறையில் பீட் அதிகாரிகள் முறை அமல்ப டுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் முதல் ஜன வரி வரையிலான 2 மாதங்களில் 7 திருட்டு வழக்குகள், ஒரு  கஞ்சா வழக்கு, ஒரு அடிதடி வழக்கு, 2 சட்ட விரோத மது  விற்பனை வழக்கு, ஒரு தடை செய்யப்பட்ட புகையிலை வழக்கு, 4 சூதாட்ட வழக்குகள் என மொத்தம் 16 வழக்கு களில் சிறப்பாகப் பணியாற்றிய கோவை, ஈரோடு மற்றும்  திருப்பூா் மாவட்டங்களைச் சேர்ந்த 21 பீட் அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகளை கோவை சரக காவல்துறை  துணைத் தலைவர் ஆ.சரவணசுந்தர் வழங்கி கவுரவித்தார்.

அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்

நாமக்கல், பிப். 6- ஒன்றிய மோடி அரசை கண்டித்து பிப். 16ல் நாடு தழு விய மறியல் போராட்டத்தின் ஒருபகுதியாக நாமக்கல்  மாவட்டத்தில் இப்போராட்டத்தை வெற்றியடையச்செய் வதற்கான அனைத்து தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. பிப்.16 நாடு தழுவிய மறியல் போராட்டம் குறித்து குமார பாளையம் விசைத்தறி, விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து  தொழிற்சங்கங்கள் சார்பில்  ஆலோசனை கூட்டம் ஏஐடியூசி.  மாவட்டப் பொருளாளர் பாலசுப்ரமணி தலைமையில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர அலுவல கத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றிய அரசின்  தொழிலாளர் நலச்சட்டங்களின் திருத்தத்தை வாபஸ் பெற  வேண்டும். விவசாயிகள் கோரிக்கை அமல்படுத்த வேண்டும்,  குறைந்தபட்ச ஆதாய விலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியு றுத்தி பிப்.16.யில் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.  பிப்.16 தேதியன்று குமாரபாளையம் கனரா வங்கி முன்பு  மறியல் போராட்டம் நடத்துவது அதில் திரளான தொழிற்சங் கங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்க  வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சிஐடியூ, ஏஐடியூசி, ஏஐசிசிடியூ, எச்எம்எஸ், ஐஎன்டியூசி. உள்ளிட்ட பல தொழிற்சங்கங்க நிர்வாகிகள் அசோகன், பாலுசாமி, கதிரவன், சுப்ரமணி, ராமசாமி, அருள்   ஆறுமுகம், சண்முகம் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவரை தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் மாநகர காவல் ஆணையரிடம் பெற்றோர் புகார்

கோவை, பிப். 6-  கோவை,கணபதி அருகே உள்ள நல்லம்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது மகனுடன் வந்து புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது மகன்  சரவணம்பட்டி விசுவாசபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில்  5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தார். அப் போது, அப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக உள்ள இஸ் ரேல் சாமுவேல் என்பவர் எனது மகனைத் தாக்கினார். இதுகு றித்து நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் அளித்த புகாரின்பே ரில் பள்ளி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை மேற்கொண் டனர். அதைத்தொடர்ந்து, எனது மகன் மீது அந்த ஆசிரியர்  வெறுப்புடன் காணப்பட்டார்.  மேலும், 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் வரை  எந்த ஒரு விளையாட்டிலும் எனது மகனைச் சேர்க்கவில்லை.  அதனால் நாங்கள் தற்போது எனது மகனை வேறொரு பள்ளி யில் பிளஸ் 1 படிப்பதற்காக சேர்த்தோம். இந்நிலையில், எனது  மகன் முன்பு படித்த தனியார் பள்ளியில் ஆண்டு விழா பிப்ர வரி 1 ஆம் தேதி நடைபெற்றது. இதில், கலந்துகொள்வ தற்காக எனது மகன் உள்பட அவரது நண்பர்கள் 5 பேர்  பள்ளிக்குச் சென்றனர். அப்போது, பழைய நண்பர்களுடன் எனது மகன் சேர்ந்து ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டி ருந்தபோது, அங்கு வந்த உடற்பயிற்சி ஆசிரியர் இஸ்ரேல்  சாமுவேல் எனது மகனைத் தாக்கியுள்ளார்.  பின்னர், அவரது அறைக்கு அழைத்துச் சென்று  எனது  மகனை மிரட்டி மீண்டும் தாக்கியுள்ளார். அதே பள்ளியில் கால் பந்து பயிற்சியாளராக உள்ள பாக்யராஜ் இதற்கு உடந்தை யாக இருந்துள்ளார். இதுகுறித்து நாங்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றோம். ஆனால்,  போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காவல் துறை ஆணையரிடம் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளோம், என்றார்.

இருளர் மக்களுக்கு சிறு வன மகசூல் உரிமம்
தருமபுரி, பிப்.5- வனப்பகுதியை ஒட்டியுள்ள இருளர் மக்களுக்கு சிறு வன மகசூல் உரிமம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்  கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் தருமபுரியில் உள்ள மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட் டம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் அப்பலா நாயுடு  தலைமை வகித்து, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக் களை பெற்றுக்கொண்டார். அப்போது விவசாயிகள் பேசுகை யில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மிட்டா ரெட்டி அள்ளி ஊராட்சி, அப்பனஅள்ளி கோம்பைக்கு மேல்  இருக்கும் வனத்தில் குப்பாகவுண்டர் நீர் ஊற்று உள்ளது. இந்த நீர் ஊற்றிலிருந்து மழைக்காலங்களில் கால்வாய் வழி யாக இலளிகம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கு  தண்ணீர் வரும். இந்த கால்வாய் வரும் வழி பல்வேறு இடங்க ளில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியாகிறது. கால்வாய் யில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய வேண்டும். தருமபுரி  மாவட்டத்திற்குட்பட்ட வனத்திலுள்ள சிறு மகசூல்களை சேக ரிக்க வனத்தை ஒட்டியுள்ள இருளர் பழங்குடி மக்களுக்கு சிறு வன மகசூல் உரிமம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர். இக்கூட்டத்தில் உதவி வனபாதுகாப்பு அலுவலர்கள் சரவ ணன், வின்சென்ட், முதுநிலை ஆராய்ச்சியாளர் மகேந்திரன், சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.