சேலம், டிச.24- பொதுமக்களிடம் ஆபாசமாக பேசி வரும் சேலம் தென்அழகாபுரம் ரேசன் கடை ஊழி யர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகரம், தென்அழகாபுரத்தில் உள்ள ஏபி.002 எண் கொண்ட நியாய விலைக் கடையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இங்கு பணி யாற்றும் ஊழியர் கடைக்கு வரும் பொது மக்களிடம் ஆபாசமாக பேசுவது, ரேசன் அட் டையை தூக்கி வீசுவது, பெண்கள், முதி யவர்களை தரக்குறைவாக பேசுவது, பொருட்களை எடை குறைவாக வழங்கு வது போன்ற அநாகரிக செயல்களில் ஈடு பட்டு வருகிறார். இதனைக் கண்டித்தும், ரேசன் கடையை இரண்டாக பிரித்து பொருட் கள் தங்குதடையின்றி அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர் எஸ். காவேரியம்மாள் தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தில், மாநகர செயலா ளர் என்.பிரவீன்குமார், மாநகரக்குழு உறுப் பினர்கள் வி.வெங்கடேஷ், பி.செந்தில் குமார், ஆர்.வி.கதிர்வேல், கிளைச் செயலா ளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மேற்கு மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணராஜ், கிராம நிர் வாக அலுவலர், காவல் ஆய்வாளர் ஆகி யோர் சம்மந்தப்பட்ட ரேசன் கடை ஊழியரை உடனடியாக மாற்றுவதாகவும், பொருட் கள் வழங்கும் நேரம், இருப்பு விபரம் எழுதி வைக்க உரிய ஏற்பாடு செய்யப்படும். கடையை இரண்டாக பிரிக்க பரிந்துரைக் கப்படும் என உறுதியளித்தனர். இதைய டுத்து போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ளப்பட்டது.