நாமக்கல், டிச.24- கலப்பட உணவுப் பொருட்கள் விற் பனையை ஒழிக்க வேண்டும், என நாமக்கல் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஆர்.ராமராஜ் வலியுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் செவ்வாயன்று தேசிய நுகர்வோர் தின விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி வீ.ராமராஜ் பேசுகையில், நாமக்கல்லில் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் தொடங்கப்பட்ட நவம்பர் 2000 ஆண்டு முதல் கடந்தாண்டு மார்ச் வரை 1107 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் முதல் தற்போது வரை 21 மாதங்களில் 462 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள் ளது. கடந்த ஓராண்டு காலத்தில் கோவையிலிருந்து விரைவான விசார ணைக்காக மாற்றலாகி வந்த 128 வழக்கு களில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந் தாண்டு மார்ச் மாதத்தில் 10 ஆண்டு களுக்கும் மேல் வழக்குகள் நிலுவை யில் இருந்தன. தற்போது வழக்கு தாக் கல் செய்து ஓராண்டுக்கு மேல் நிலுவை யில் உள்ள வழக்குகளின் எண் ணிக்கை 7 மட்டுமே. நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 119 மட்டுமே. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப் படி தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு வழக்கும் மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். விரை வில் நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்க்கப்படுவதோடு, இனிமேல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் தீர்வு காண நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகி றது. கடந்த நிதியாண்டில் சமரச பேச்சு வார்த்தை மூலம் தமிழகத்தில் அதிக வழக்குகளை தீர்த்து வைத்து, இழப்பீடு களை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் நுகர்வோர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. மக்களிடையே நுகர் வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவ தன் மூலமாகவும், நுகர்வோர் வழக்குக ளில் விரைவான நீதியை வழங்குவதன் மூலமாகவும் மக்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் மீது நம்பிக்கை அதிகரிக் கும். 100 பேர் பாதிக்கப்பட்டால், 5 பேர் தான் நீதிமன்றத்தை நாடுகின்றனர். தற் போது நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தாக்கல் செய்யும் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. மேலும், தரமற்ற குடிநீர், கலப்பட உணவுப் பொருட்கள் சந்தை யில் விற்பனை செய்யப்படுவதை ஒழிக்க வேண்டும். நுகர்வோர் விழிப் புணர்வை ஏற்படுத்தவும், பாதிப்பு களை தடுக்கவும் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் சிறப்பாக செயல்பட வேண் டும். மாநில அரசின் ஆணைப்படி, மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடைபெறும் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறது. விரைவில் நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைக் கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை ஏதாவது ஒரு வகையில் நுகர் வோராகவே வாழ்கிறார். பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தித் துறையும், சேவைத் துறையும் எவ்வளவு முக் கியமோ அதற்கு இணையான முக்கி யம் நுகர்வோர் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும், என்றார். முன்னதாக, இந் நிகழ்ச்சியில் ஆணைய உறுப்பினர்கள் ஆர்.ரமோலா, என்.லட்சுமணன், ஆகி யோர் முன்னிலை வைத்தனர். குற்றவி யல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர். அய்யாவு, சிவில் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.ராஜவேலு மற்றும் சட் டக்கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.