வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி
ஈரோடு, மே 9- ஈரோடு மாவட்டம், வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி இந்துமதி, தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவ ருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றச்செயல்களின் புகழிடமாகும் பொள்ளாச்சி ரயில் நிலைய பின்புற வழித்தடம்
பொள்ளாச்சி, மே 9- கோவை மாவட்டம், பொள்ளாச்சி - மீன்கரை சாலையில் பொள்ளாச்சி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து கோவை, சென்னை, மதுரை, கேரளா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல நாள்தோறும் ஆயிரக்கணக் கான மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த ரயில் நிலையம் பின்புறம் பார்சல்கள் எடுத்துச் செல்லும் வழித்தடம் உள்ளது. அவ்வழியாக லாரிகள் மற்றும் மினி ஆட்டோக்கள் வந்து செல்கின்றன. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சிலர் அப்பகுதியில் பாலியல் மற்றும் கஞ்சா, மது அருந்து தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சமூக விரோத செயல்களில் ஈடுபடு வோர்களிடம் காவல் துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாக அப்பகுதியில் பார்சல் ஏற்றும் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் பயணிக்கும் லாரி ஓட்டு நர்கள் கூறுகையில், பொள்ளாச்சி ரயில் நிலையம் பின்புறம் இரவு நேரங்களில் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் பலர் பாலியல் தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். மது அருந்திவிட்டு அந்த வழித்தடத்திலேயே மது பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். இதனால் எங்களது வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதோடு பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றோம். இதனை தடுக்க கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்த வேண்டும். காவல் துறையினர் குறைந் தது மூன்று முறையாவது இப்பகுதியில் ரோந்து வர வேண் டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றிய விவசாய சங்கத்தின் அமைப்புக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர் தேர்வு
உடுமலை, மே 9- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடிமங்கலம் ஒன் றிய அமைப்பு பேரவை கூட்டம் சனிக்கிழமை உடுமலை, கே.பி.கோவில் வீதியில் உள்ள ஸ்டாலின் நிலையத்தில் எம். சுந்தர்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மாவட்ட துணைச் செயலாளர் பால தண்டபாணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் ஏ.தங்கவடிவேலன், சி.ஜெ.ஸ்ரீதர், எம். சுந்தரராஜ், க.மாரிமுத்து, மகேந்திரன் ஆகிய 5 பேர் கொண்ட குடிமங்கலம் ஒன்றிய அமைப்பு குழுவும், இதன் ஒருங் கிணைப்பாளராக ஸ்ரீதரும் தேர்வு செய்யப்பட்டனர். வரும் 15 நாட்களில் உறுப்பினர் பதிவு, உழவன் உரிமை சந்தா சேர்ப்பு கோட்டாவை நிறைவு செய்வது, அதற்கடுத்து திட்ட மிட்டு ஒன்றிய மாநாட்டை சிறப்பாக நடத்துவது, விவசாய பிரச்சினைகளில் உரிய தலையிடு செய்வது என முடிவு செய்யப்பட்டது.
வேளாண் கட்டமைப்புக்கு வங்கி மூலம் கடன் உதவி
உடுமலை, மே 9- தமிழக அரசின் வேளாண் வணிகத் துறை, விவசாயிகள் வாழ்க்கை மேம்பாட் டுக்கான கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. வேளாண் உள்கட்டமைப்பு நிதியில் அறு வடைக்கு பின்செய் மேலாண்மைக்கான கட்டமைப்புகள் மற்றும் சமுதாய வேளாண் கட்டமைப்புகளை நிரந்தரமாக அமைக்க நிதி உதவி வழங்கப்படுகிறது. 22 பொது மற் றும் தனியார் வங்கிகள் வாயிலாக, கடன் வழங்கப்படும். கடன் மீதான வட்டியில், 3 சதவீத சலுகை யுடன், இரண்டு கோடி ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத் தில், தனிநபர், குழுக்கள், மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள் பயன்பெறலாம். விரிவான திட்ட அறிக்கை தயாரித்து இணையதளத்தில் பதிவு செய்யலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது. வேளாண்வணிகத்துறை அதிகாரிகள் கூறுகையில், திட்டத்தில் பயன்பெற, விரி வான திட்ட அறிக்கையுடன், agrinfra.dac. gov.in என்ற இணையதள முகவரியில் விண் ணப்பிக்கலாம். உணவு பொருள் பதப்படுத் தும் நிலையங்கள், சிப்பம் கட்டும் அறை, சேமிப்பு கிடங்கு, மதிப்பீட்டு அலகு, குளிர் பதன அறை, பழுக்க வைக்கும் கூடங்கள், தரம் பிரிக்கும் அலகுகள், தளவாட வசதி களை உருவாக்க இத்திட்டத்தில் வங்கிக் கடன் பெற்று பயன்பெறலாம் என்றனர்.
லாரிகள் மோதி விபத்து: ஓட்டுநர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
தாராபுரம், மே 9- தாராபுரம் அருகே கன்டேய்னர் லாரி மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உள் பட 2 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. வட மாநிலத்திலிருந்து தாராபுரத்தில் உள்ள இருச்சர வாகன விற்பனை நிலையத் திற்கு இருசக்கர வாகனங்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி வந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-காங்கயம் சாலையில் உள்ள ஊதியூர் தாயம்பாளை யம் பிரிவு அருகே வந்துகொண்டிருந்த போது எதிரே தூத்துக்குடியில் இருந்து ஈரோடு நோக்கி வந்து மற்றொரு லாரி மீது மோதி 2 லாரிகளும் தீப்படித்து எரிந்தது. தக வல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி ஒட்டு நர் பிரபாகரன் (30) என்பவர் சம்பவ இடத்தி லேயே உடல் கருகி உயிரிழந்தார். படுகாயம டைந்த கார்த்திக் (26), மேற்கு வங்கத்தை சேர்ந்த கிளீனர் ராபிலாத் (18) ஆகிய இரு வரையும் மீட்ட தீயணைப்பு துறையினர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராபிலால் உயிரிழந்தார். கார்த் திக் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலை விபத்தில் வாலிபர் பலி
அவிநாசி, மே 9- அவிநாசி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளை ஞர் ஒருவர் உயிரிழந்த சம்ப வம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. அவிநாசி அருகே தேவ ராயம்பாளையம் பகுதி யைச் சேர்ந்த சண்முகம் மகன் சரவணன் (28). இவர், தனது பிறந்தநாளை கொண் டாட கேக் வாங்குவதற்காக அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப் போது, அவிநாசி மங்கலம் சாலை கருணைபாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் இவர் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளா னது. இதில் பலத்த காயம டைந்த சரவணன் சம்பவயி டத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவிநாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி: பூட்டிக்கிடக்கும் இலவச கழிப்பிடத்தால் பெண்கள் கடும் அவதி
பொள்ளாச்சி, மே 8- பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் பெண்கள் இலவச பொதுக்கழிப்பிடம் பூட்டிக்கிடப்பதால் பெண்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி புதிய பேருந்து நிலை யம் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக காவல் துறைக்கு சொந்தமான இடத்தில் பொள்ளாச்சி நகராட்சியால் கட்டப் பட்டது. இப்பேருந்து நிலையத்தில் ஆழியார், ஆனைமலை, கோட்டூர், வால்பாறை, கேரள மாநிலமான பாலக்காடு வரை நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல் கின்றனர். இதனால் இயற்கை உபாதைகளுக்காக இலவச மாக பெண்களுக்கும், ஆண்களுக்கும் புதிய கழிப்பிடங்கள் கட்டப்பட்டது. இதன் அருகிலேயே கட்டண கழிப்பிடங் களும் கட்டப்பட்டது. இதற்கிடையே கட்டண கழிப்பிடங் களை பொதுமக்கள் குறைந்த அளவே பயன்படுத்துவ தால் இலவச கழிப்பிடங்கள் மூடப்பட்டு, இரண்டு ஆண்டு களுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலையீட்டின் காரணமாக, பொள் ளாச்சி நகராட்சி ஆணையாளர் தானுமூர்த்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதன்பின் இலவச ஆண்கள் கழிப்பிடம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப் பட்டது. ஆனால், பெண்கள் கழிப்பிடம் இன்றளவும் பூட்டப் பட்ட நிலையிலேயே உள்ளது. இதுகுறித்து பெண் பயணிகள் கூறுகையில், பொள் ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் பெண்களுக்கான இல வச கழிப்பிடம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சிரமம் ஏற்படுகிறது. கட்டண கழிப்பிடங்களில் ரூ.5 முதல் ரூ.10 வரை வசூல் செய்யப்பட்டுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளும், கூலி வேலைக்கு செல்லும் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். இலவச பொதுக்கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழையால் வாழைகள் சேதம் இழப்பீடு வழங்க கோரிக்கை
ஈரோடு, மே 9- ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் ஞாயிறன்று இரவு மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் மழை பெய்தது. அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. அம்மாபேட்டையில் 7 மின்கம்பங்களும், தென்னம்பட்டியில் 3 மின்கம்பங்களும் சூறாவளி காற்றுக்கு சாய்ந்து விழுந்தன. சத்தியமங்கலத்தில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய் தது. சத்தியமங்கலம், ஓட்டக்குட்டை, சிக்கரசம்பாளையம், புளியங்கோம்பை, புதுபீர்கடவு, பண்ணாரி, அரியப்பம் பாளையம், கெஞ்சனூர், திம்பம் மலைப்பாதையிலும் பலத்த மழை பெய்தது. இதனால், சத்தியமங்கலத்தை அடுத்த ஓட்டக் குட்டையில் கோபால்சாமி என்பவரது தோட்டத்தில் பயிரிடப் பட்டிருந்த அறுவடைக்கு தயாரான 2 ஆயிரம் கதளி வாழை கள் சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்து சேதமானது. அந்தி யூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் 11.30 பலத்த மழை பெய்தது. பெருந்துறை, காஞ்சிக் கோவில், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சென்னிமலையில் ஞாயிறன்று இரவு சூறா வளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சென்னிமலையை அடுத்த பசுவப்பட்டி ஊராட்சி கந்தசாமி பாளையத்தில் முத்துக்குமார் என்பவரது தோட்டத்தில் 7 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான நேந்திரன் வாழைகள் சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்து சேதமா னது. எனவே, சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
ஈரோடு, மே 9- கோவையை சேர்ந்தவர் தவுபிக் (21). இவர் கோவை யில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், தனது உறவினருடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந் துள்ளார். அப்போது கொடிவேரி ஆற்று பாலத்திற்கு கீழ் இறங்கி குளிக்க சென்ற தவுபிக் ஆழமான பகுதிக்கு சென்று, தத்தளித்த நீரில் மூழ்கியுள்ளார். உடனே அருகில் இருந்த வர்கள் தவுபிக்கை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே தவுபிக் இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
மனைபட்டா கேட்டு மாற்றுத்திறனாளி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்
தருமபுரி, மே 9- தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (52). இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர் சொந்த வீடு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார். எனவே, தனக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட் சியர் உள்ளிட்டோரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தி ருந்தார். இதனடிப்படையில் அரூர் அடுத்த கீரைபட்டி இந் திரா நகரில் இருளர் காலனி பகுதியில் இவருக்கு பட்டா வழங் கப்பட்டது. இதற்கிடையே, மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு வர் இந்த பகுதியில் குடிபெயரக்கூடாது என தெரிவித்து, கிராம மக்களே அந்த நிலத்தை அபகரித்து கோவில் கட்டிய தால், வேறு இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். அதன்பின், அரூர் அம்பேத்கர் நகர் பகுதியிலேயே இவ ருக்கு இரண்டு சென்ட் அளவில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு 2 லட்சம் ரூபாய் செலவு செய்து அடித்தளம் அமைத் துள்ளார். இந்நிலையில், ஒதுக்கப்பட்ட இடமானது அரூர் பேரூராட்சிக்குட்பட்ட இடம் என்பதால், அரூரையடுத்த செக் காம்பட்டி கிராமத்தில் இவருக்கு வேறு இடமும் வழங்கப் பட்டது. அதற்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை எனக் கூறி அரூர் கச்சேரிமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.