திருப்பூர், ஜன.16- பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக பின் னலாடை தொழில் நகரமான திருப்பூர் வெறிச்சோடி காணப்ப டுகிறது. பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் ஐந்தாயி ரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் மதுரை, தேனி, கிருஷ்ணகிரி, திருச்சி, என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் திருப்பூரிலேயே தங்கி பின்ன லாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு திருப்பூரில் தங்கி பணியாற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தீபாவளி மற்றும் பொங்கள் பண்டிகைகளுக்கு மட்டுமே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல் வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, பின்னலாடை நிறுவனங்கள் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை விடு முறை அளித்துள்ளதால், தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று விட்டனர். இதனால், திருப்பூர் பிரதான சாலைகளான குமரன் சாலை, காதர் பேட்டை, அரிசி கடை விதி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிளில் வாகன போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.