அவிநாசி, மார்ச்.14 மாற்றத்தை ஏற்படுத்துகிற புரட்சி சொல் தான் இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் வஞ்சிபாளையத்தில் சிஐடியு இர யில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர் கள் சங்கம் சார்பில் வியாழனன்று நடை பெற்ற கொடியேற்று விழாவில் தெரிவித் தார். சிஐடியு திருப்பூர் மாவட்ட ரயில்வே கூட் செட் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார் பில் வஞ்சிபாளையத்தில் ரயில்வே கூட்செட் டில் 5 ஆம் ஆண்டு கொடியேற்று விழா நடை பெற்றது. சிஐடியு மாநில தலைவர் அ.சவுந் தரராசன் சிஐடியு கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவை சங்கத்தின் நிர்வாகி எஸ்.எம். பழனிச்சாமி தலைமையேற்று நடத்தினார். இதில், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் பேசுகையில், கூட்ஸ் செட் தொழிலாளிகள் பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் தான் பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு போது மான கூலி கிடைப்பதில்லை. கூலி உயர்வு கேட்கும் போது கொடுக்க முடியாது என்பது தான் பதிலாக வருகிறது. இதை எதிர்த்து சிஐ டியு சங்கமும், தொழிலாளிகளும் போராடி வருகிறார்கள். அரசாங்கம் இதில் போது மான கவனம் செலுத்துவது இல்லை. கூலி உயர்வு கேட்டு சிஐடியு நடத்திய பல போராட் டங்கள் வெற்றி பெற்றுள்ளன. மேலும், நல வாரிய கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அர சாங்கம் திடீரென்று இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் தரவுகளும், விவரங்க ளும் அழிந்து போய்விட்டது என்று கூறி தொழி லாளிகளை ஏமாற்றுகிறது. சங்கம் எதற்கு என்று கருதக்கூடிய தொழிலாளிகளும் இருக் கிறார்கள். தற்பொழுது இன்குலாப் ஜிந்தா பாத் என்று கோஷம் போடுகிறோம். மாற் றத்தை ஏற்படுத்துகிற புரட்சி தான் இன்கு லாப் ஜிந்தாபாத். சங்கம் இல்லை என்றால் நிரந்தரமாக எங்கும் பணியாற்ற முடியாது. சங்கம் இல்லை என்றால் நிரந்தரமாக கூலி யையும் காப்பாற்றிக் கொள்ள முடியாது. சங் கம் இல்லை என்றால் பாதுகாப்பற்றவர்க ளாக இருப்போம் என்பதை தொழிலாளர் கள் உணர வேண்டும். அந்த அடிப்படை யில் இந்த சங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்வில், பதிவு கல்வெட்டை சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி திறந்து வைத் தார். இதில், கூட்செட் சுமைப்பணி தொழிலா ளர்கள் மாவட்டச் செயலாளர் கே.உன்னிகி ருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், சிஐடியு மாநில நிர்வாகி சந்தி ரன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்து சாமி, சிஐடியு கூட்செட் சங்க நிர்வாகிகள் சிவ சுப்பிரமணியம், துணைச் செயலாளர் விஷ்ணு ராஜ், கனகராஜ், சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.