உதகை, அக்.4- உதகை 200 ஆம் ஆண்டை கொண்டாடும் வகையில், உதகை நகரை புதுப்பிக்க ரூ.1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் புனர மைக்கப்பட்ட புதிய பூங்கா மற்றும் உதகை நகரின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட் டுள்ள வரவேற்பு பூங்காவை நீலகிரி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா புதனன்று திறந்து வைத்தார். இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட் டமான நீலகிரி மாவட்டத்தில், நவீன உதகை உருவாகி 200ஆவது ஆண்டு கொண் டாடுவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய் துள்ளார். இந்த நிதியின் கீழ் உதகையை நவீனப் படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நகர்ப் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டேவிஸ் பூங்கா உருவாக்கப்பட்டது. இப்பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதேபோல், ஒரு கோடி ரூபாய் மதிப் பீட்டில் கேரளம் மற்றும் கர்நாடகாவில் இருந்து உதகைக்கு வரக்கூடிய உதகை நகரில் முகப்பு வாயிலான எச்பிஎப் பகுதியில், நீலகிரியின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய குடில், அவர்களின் கலாச்சா ரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு உருவங்கள், யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் உருவங்கள் வைக்கப்பட்ட வரவேற்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு பூங்காவையும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலு வலர் கீர்த்தி பிரியதர்ஷினி, உதகை நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி, நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார், மூத்த நகர மன்ற உறுப் பினர் முஸ்தபா, மாவட்ட திட்டக்குழு உறுப் பினர் ஜார்ஜ் ஆகியோர் உடனிருந்தனர்.