சேலம் மாவட்டம், பெத்தநாய்க்கன் பாளையம் தாலுகாவிற்குட்பட்ட பட்டி யலின சிறுமியின்குடும்பத்தினர் குடிநீர் தட்டுப்பாட்டோடு சிரமப்பட்ட குடும்பம். அடிப்படை தேவைகள் கிடைக்காமல் அலைந்து கொண்டி ருந்தது. இந்த சூழ்நிலையில் வீட்டிற்கு அருகில் உள்ள காட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு குடிநீர் எடுத்து சிறுமி வந்து கொண்டிருந்தனர். இந்தச் சூழ் நிலையை பயன்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட நபர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு கட்டா யப்படுத்தினான். இதிலிருந்து தப்பித்து சிறுமி வீட்டுக்கு ஓடி வந்தது. தனது தாயிடம் பாலியல் வன்கொடுமை முயற்சியை சொல்லி அழுது கொண்டிருந்தபோதே, பின்னாலே வந்த அந்த காமுக சாதி வெறியன் கையில் கொடுவாளோடு வந்தான். அந்த வெறியனை தடுத்த முயன்ற சிறுமியின் தாயை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு சிறுமியின் தலை முடியை பிடித்து ஒரு ஆட்டை அறுப்பது போல் கழுத்தைத் தனியாக அறுத்து எறிந்தான். பட்டியல் இன சாதியச் சேர்ந்த பெண் தன்னு டைய காம இச்சைக்கு ஒத்துப்போ காத வெறியும், சாதி ஆணவமும் சேர்ந்து அந்த சிறுமி படுகொலை செய்யப்பட்டார். இந்த தகவல் அறிந்த வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டத் தலைவர்கள், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலை வர்கள் யு.கே.சிவஞானம், கே.சாமு வேல்ராஜ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் சொல்லி அதற் கான கண்டன இயக்கங்களை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய தொடர்ந்து இயக்கம் நடத் தினர்.
கோகுல்ராஜ் படுகொலை
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வைச் சேர்ந்த கோகுல்ராஜ் சாதி ஆணவ படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த படுகொலை தமிழகத்தையே அதிர்ச்சி உள்ளாக்கிய ஒரு படுகொலை யாகும். இந்த சம்பவம் நடந்த உடனே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனடி யாக களத்திற்குச் சென்றது. பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் நின்று களப் போராட் டங்கள் நடத்தி சமூக விரோதிகளை கைது செய்திட தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டது. குடும்பத்தோடு தொடர்ந்து சகோதர ரீதியான தொடர்புகளை வைத்து அவர்களுக்கு அனைத்து உதவிகளை யும் செய்தோம். நீதிமன்றத்தில் குற்ற வாளிகளுக்கு கடுமையான தண்டனை
விதிக்கப்பட்டு தீர்ப்பு வந்த பிறகும் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாவட்டத் தலைவர்கள் கள் நேரில் சென்று கோகுல்ராஜ் குடும்பத்திற்கு ஆதரவை உறுதி செய்து கொலை வழக்குகளில் உறுதியாக நின்று அந்த குடும்பத்தை பாதுகாத் தோம். எடப்பாடி தாலுகா வண்ணான் குட்டை பகுதியில் ஒரு தனியார் ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்த இரண்டு பட்டியல் பிரிவு பெண்களை பக்கத்துக் கடையைச் சார்ந்த மாதையன் எனும் நபர் சாதியை சொல்லி திட்டி மானபங் கப்படுத்தி செருப்பால் அடித்து கேவலப் படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி யை உருவாக்கியது. அரை நிர்வாண மாக்கி பட்டியலின பெண்ணை மானபங்கப் படுத்திய கொடுமைக்கு எதிராக உடனடி யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் இறங்கியது. சம்பந்தப்பட்ட பெண்ணை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் தந்து அவருக்கு நியாயம் கேட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப் பாளர் துணை கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். சம்பந்தப் பட்ட சமூக விரோதியை கைது செய்வ தில் தாமதம் ஏற்பட்டதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக எடப் பாடியில் 28.3.23 அன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தினோம். பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தார் உட்பட ஏராளமான மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற் றனர். அதன் பிறகு சம்பந்தப்பட்ட அந்த சமூக விரோதி மாதையன் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப் பட்டு கைது செய்யப்பட்டார்.
ஏற்காட்டில் மலைவாழ் சிறுமி பாலியல் பலாத்காரம்
ஏற்காடு தாலுகாவில் நாகலூர் ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியின 15 வயதான அந்த சிறுமியை இரவு 9:30 மணி அளவில் அதே ஊரைச் சேர்ந்த சித்தையன், சக்தி எனும் இரண்டு பேர் இரண்டு சக்கர வாகனத்தில், வாயைப் பொத்தி கடத்திச் செல்கின்றனர். இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று அடர்ந்த காட்டில் அந்த சிறுமியை மானபங்கப்படுத்துகின்றனர். பாலியல் வன்புணர்வு சித்திரவதைக்கு உள் ளான அந்த சிறுமி கத்திக் கதறியும் சம்பந்தப்பட்ட காமுகர்கள் விட வில்லை. அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து சம்பந்தப்பட்ட பெண் இரவு நேரத்தில் வீடு வந்து சேர்ந்து தனது தாய். தந்தையரிடம் சொல்லி அழுதார். இதைக் கேட்டவுடன் சிறுமி யின் தந்தை சம்பந்தப்பட்ட அந்த இரண்டு பேருடைய வீட்டுக்கு நேரடி யாகச் சென்று கேட்டதற்கு, சம்பந்தப் பட்ட அந்த சமூக விரோதிகள் கொடு வாளால் அந்தப் பெண்ணின் தந்தையை வெட்டி கொல்ல முயன்றனர். தலையில் 11 தையல் போடும் அளவுக்கு வெட்டப்பட்டு அந்தப் பெண்ணின் தந்தை நீண்ட சிகிச் சைக்கு பின் உயிர்பிழைத்தார். தகவல் அறிந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக மருத்துவமனைக் குச் சென்று அந்த தந்தைக்கும் பெண் ணுக்கும் முறையான சிகிச்சைக்கு உதவினோம். அதன் பிறகு காவல்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தி அந்த நபர் களை கைது செய்ய வலியுறுத்தினோம். இதற்குப் பிறகும் காவல்துறை தாமதம் செய்ததால் கண்டன போராட்டத்திற்கு திட்டமிட்டு நமது பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் பிறகு சம்பந்தப்பட்ட இரண்டு குற்றவாளி களையும் காவல்துறை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தது. பாதிக்கப்பட்ட பழங்குடி யின சிறுமி எட்டாம் வகுப்பு படிக்கக் கூடிய நிலையில் உள்ளவர். பாதிக்கப் பட்ட சிறுமிக்கு ஆதரவாகவும் சம்பந் தப்பட்ட சமூக விரோதிகளை கைது செய்வதிலும் மார்க்சிஸ்ட் கட்சியே முன் னெடுத்து வலுவாக பணியாற்றியது.
கல்வராயன் மலைவாழ் மக்களின் நம்பிக்கை ஸ்தாபனம்
பழங்குடி மக்கள் பெரும்பான்மை யாக வாழக்கூடிய பகுதி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா கல்வராயன் மலைப் பகுதி யாகும். இந்தப் பகுதியில் வாழக்கூடிய பழங்குடியின மக்களுக்கு அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடி யாமல் அல்லல்படுகிறார்கள். குறிப்பாக குடிநீர், தெரு விளக்கு, கழி வறை, சாலை வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்படக் கூடிய சூழ்நிலை இன்றும் உள்ளது. ஏராளமான ஊர்களுக்கு சரி யான பாதை வசதி இல்லாமல் மயான வசதி இல்லாத சூழ்நிலையும் உள்ளது. இங்கு செயல்படுகிற உண்டு, உறை விட பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. பழங்குடி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மையப்படுத்தி கடந்த பிப்ரவரி மாதம் கட்சியின் சார்பில் பழங்குடி மக்களை திரட்டி கண்டன போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தின் பிறகு பாதிக்கப்பட்ட அந்த மக்களின் அடிப்ப டைத் தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. குடிநீர், தெரு விளக்கு மற்றும் உண்டு, உறைவிடப் பள்ளியில் காலியாக இருந்த ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டார்கள். அரசு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் இல்லாமல் மார்க்சிஸ்ட் கட்சி உதவி யோடு மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகின் றனர். இது அந்த பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு வலுவான தலமாக மாறி வருகிறது. இதன் விளை வாக அந்தப் பகுதியில் உள்ள நான்கு ஊராட்சிகளில் ஒரு ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி தனியாக நின்று வெற்றி பெற்று மக்களின் நம்பிக்கை ஸ்தாபனமாக விளங்குகிறது.
-மேவை.சண்முகராஜா,
மாவட்டச் செயலாளர்,
மார்க்சிஸ்ட் கட்சி,
சேலம் மாவட்டம்