திருப்பூர், நவ. 22 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்ப ணித் திட்டம் அலகு-2 மாணவர்கள் மழைநீரை சேமிப்பதற்காக கல்லூரி வளாகத்தில் என்.எஸ்.எஸ்.குளம் ஒன்றை உருவாக் கினர். செவ்வாயன்று இரவு பெய்த கனமழையால் இந்த குளம் நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த மழைப் பருவத் தில் மூன்றாவது முறையாக இக்குளம் நிரப்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தெரிவித்தனர். அலகு -2 மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் ஆர் வத்தோடு குளம் நிரம்பி உள்ளதை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.