நாமக்கல், ஜூலை 12- கொலை வழக்கில் தலை மறைவான பிரபல ரவுடி 10ஆண்டுகளாக அகோரி யாக வலம் வந்த நிலையில் போலீசார் கைது செய்துள் ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில், காவல் ஆய் வாளர் தவமணி தலைமை யில் தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தே கத்திற்குரிய வகையில் சாலையில் வந்த ஒரு அகோரி உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட் டங்களில் பத்துக்கு மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ள சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி முஸ்தபா என்பது தெரிய வந்தது. தன்னை கொலை வழக்குகளில் தொடர்ந்து போலீசார் தேடி வந்ததால் போலீசாரிடம் இருந்து தப்பிக்க காசிக்குச் சென்று முஸ்தபா (எ) முகாமது ஜிகாத் என்கிற தனது பெயரை ஜிக்லினத் அகோரி என்று பெயரை மாற்றிக் கொண்டு சாமியாராக 10 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இதையடுத்து, போலீசார் முஸ்தபாவை கைது செய்து திருச்செங்கோடு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.