சேலம், டிச.26- கெங்கவல்லி அருகே பாய்ந் தோடும் சுவேத நதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், தெற்கு காடு கிராமம் துண்டிக் கப்பட்டுள்ளது. இதனால், அப் பகுதி கிராம மக்களே ஒன்று சேர்ந்து போக்குவரத்து வசதிக் காக தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்துள்ளனர். சேலம் மாவட்டம், கெங்க வல்லி பேரூராட்சி, 15வது வார்டு தெற்கு காடு பகுதியில் சுவேத நதி பாய்ந்தோடுகிறது. மழைக்கா லங்களில் சுவேத நிதியில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும்போது, கெங்கவல்லி நகருக்குள் தண்ணீர் புகுந்தால் அப்பகுதி பொதுமக் கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு, சமீ பத்தில் பெய்த கனமழை காரண மாக, சுவேத நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், கெங்கவல்லிக்கு வர வழியின்றி பொதுமக்கள் தவித்தனர். அத்தி யாவசிய தேவைக்காக சுமார் 5 கி.மீ. சுற்றி வலசக்கல்பட்டியை கடந்து செல்லும் நிலை ஏற் பட்டது. இதனால், விவசாயிகள் மற்றும் மாணவ, மாணவிகள் மருத்துவமனை உள்ளிட்ட அவசர வேலையாக்காக செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, அப்பகுதி பொது மக்கள் ஒன்று சேர்ந்து தற்காலி கமாக பாலம் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி, வீட்டுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வசூல் செய்து, தேவையான பொருட் களை வாங்கி சுவேத நதியின் குறுக்கே தற்காலிகமாக பாலம் அமைந்துள்ளனர். சுமார் 8 அடி நீளம் கொண்ட 10 ரிங் சிமெண்ட் குழாய்கள் போடப்பட்டு தரைமட்ட பாலத்தை தற்காலிக மாக அமைத்துள்ளனர். இதனால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக 5 கி.மீ. சுற்றி வந்த தெற்கு காடு மக்கள்,
இந்த தரைப்பாலம் வழி யாக கெங்கவல்லி வந்து செல்கின் றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கெங்கவல்லி – தெற்கு காடு கிராமத்தை இணைக்கும் வகையில் சுவேத நதியின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண் டுமென, 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு பறிகு கன மழை காரணமாக, சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. இதனால், தினசரி சுமார் 5 கி.மீ. தூரம் சுற்றி, கெங்கவல்லி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், எவ்வித நடவ டிக்கையும் எடுக்காததால், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி தற்காலிகமாக தரைப் பாலம் அமைத்துள்ளோம். அது மட்டுமின்றி வேப்பமரம் முதல் பனங்காடு வரை தற்காலிக மண்சாலையும் அமைக்கப்பட் டுள்ளது. நீர்வரத்து குறைந்த பிறகு, தமிழக அரசு சுவேத நதியின் குறுக்கே சிறிய தரைப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.