districts

பயோமெட்ரிக் முறையால் நியாய விலைக் கடையில் நெடுநேரம் காத்திருந்த பொதுமக்கள்

அவிநாசி, ஜன.12- பயோமெட்ரிக் முறை மாற்றப் பட்டதால், சேவூர் நியாய விலைக் கடையில் நீண்ட நேரமாக காத்தி ருந்து பொதுமக்கள் அவதிக்குள் ளாகினர். தை திருநாளை முன்னிட்டு, கடந்த வாரம் முதல் நியாயவி லைக் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகி றது. இப்பரிசு தொகுப்பு பெறுவ தற்கு குடும்ப அட்டை மட்டும் ஸ்கேன் செய்யப்பட்டு கையெ ழுத்து பெறப்பட்ட பிறகு பொருள் கள் வழங்கப்பட்டு வந்தது. கைரே கைப் பதிவு இல்லாமல், பயோ மெட்ரிக் முறையின்றி பொருள் கள் வழங்கப்பட்டதால், நியாயவி லைக் கடைக்கு வரும் குடும்ப அட் டைதாரர்கள், விரைவில் பொருட் களை வாங்கிச் சென்று வந் தனர். இதற்கிடையில் திடீரென மீண்டும் பயோமெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டு கைரேகைப் பதிவு முறை செயல்படுத்தப்பட்டதால், நியாயவிலை கடைக்கு வந்த ஒவ் வொரு குடும்ப அட்டைதார்களும் இயந்திரத்தில் குடும்ப அட் டையை பதிவு செய்து, கைரேகை  பதிவானவுடன் தான் பொருட் களை வாங்கி செல்லும் நிலை ஏற் பட்டது.  குறிப்பாக  அவிநாசி வட்டம்,  சேவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கடை எண்.1இல் ஆயிரத்திற்கும் அதிக மான குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். பயோமெட்ரிக் முறை யில் கைரேகை பதிவாக தாம தமானதால், 100க்கும் மேற்பட் டோர் காலை முதல் 4 மணி நேரத் திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதையடுத்து மதி யம் 2மணிக்கு பயோமெட்ரிக்  முறை ரத்து செய்யப்பட்டதால்,  காத்திருந்த குடும்ப அட்டைதாரர் கள் எளிமையாகவும், விரைவாக வும் பரிசு தொகுப்பு பொருள்களை வாங்கிச்சென்றனர். இதேபோல், மாதமாதம் வழங்கப்படும் பொருள்களை வாங்குவதற்கும் பயோமெட்ரிக் முறை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.