districts

img

இனி ஆலையை திறக்கவே கூடாது: பொதுமக்கள் கோரிக்கை

மே.பாளையம், ஏப்.30- மேட்டுப்பாளையம் அருகே தனி யார் தொழிற்சாலையில் ரசாயன கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக் குள்ளான சம்பவத்தை தொடர்ந்து,  ஆலையை இனிமேல் திறக்கக்  கூடாது என கிராம மக்கள் கோரிக்கை  விடுத்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள சிக்காரம்பா ளையம்  ஊராட்சிக்கு உட்பட்ட சென் னிவீராம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை யில் உள்ள ரசாயன கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இன் னமும் செயல்பாட்டிற்கு வராத இந்த  (லேஸ் போன்ற உணவு பொருள்)  சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை யில் சோதனை ஓட்டம் நடைபெற்ற  போது, இந்த விபத்து ஏற்பட்டுள் ளது.  வாயு நிரப்பப்பட்ட கேஸ்  சிலிண்டர் வெடித்த காரணத்தால் ஆலையை சுற்றியிருந்த மக்களில் பலருக்கு  கண் எரிச்சல், குமட்டல், தலைசுற்றல்  உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வருவாய்த்துறை,  காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை  அதிகா ரிகள் நிலைமையை ஆய்வு செய்த னர்.  சற்று நேரத்தில் இதன் தீவிரம்  குறைய துவங்கிய போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலையை சுற்றி வசித்து வந்த நூற் றுக்கும் மேற்பட்ட மக்களை அங்கி ருந்து அப்புறப்படுத்தி பாதுகாப் பான தூரத்தில் இருந்த தனியார் திரு மண மண்டபத்தில் தங்க வைக்க  ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாரிக ளின் உத்தரவின்படி அப்பகுதி பொது  மக்கள் தனியார் திருமண மண்டபத் தில் தங்கி உள்ளனர். வாயு கசிவால்  யாருக்கும் இனி பாதிப்பு ஏற்படாது  என கண்டறிந்த பின்னர் இவர்கள்  தங்களது இருப்பிடத்திற்கு செல்ல லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக செயல்படவே துவங் காத தனியார் சிப்ஸ் கம்பெனியில் ஏற்பட்ட இந்த வாயு  சிலிண்டர் விபத்து இப்பகுதியில் ஒரு வித பதட் டத்தையும் பரபரப்பையும் உருவாக் கியுள்ளது.  இதனிடையே, செவ்வாயன்று காலை விபத்து ஏற்பட்ட ஆலைக்கு வந்த மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் நேரில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து, வருவாய்த்துறை அதி காரிகளை முற்றுகையிட்ட மக்கள் இனி எக்காரணத்தை கொண்டும் ஆலையை திறக்க கூடாது, இதற்கு  மாவட்ட ஆட்சியர் உறுதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.