districts

img

ஊருக்குள் தேங்கி நிற்கும் கழிவு நீர்

சூலூர், நவ. 23 - அன்னூர் அருகே உள்ள கிராமம்  ஒன்றில் தேங்கி நிற்கும் கழிவு நீர் பிரச்ச னையை சரி செய்யக்கோரி பொதுமக்கள்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த  ஒட்டப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட  அல்லிக்காரம்பாளையம் கிராமத்தில் 300 குடும்பங்கள் உள்ளன. இங்கு மேற்கு விநாயகர் கோவில் வீதியில் தண்ணீர் தொட்டி, பொது குடிநீர் குழாய்கள் மற்றும்  விநாயகர் கோவில் உள்ளது. தெற்கு மற்றும்  கிழக்குப் பகுதியில் இருந்து கழிவு நீர்  இந்த வீதியில் செல்கிறது.  சிலர் இதை தடை செய் வதால் 200 அடி தூரத்திற்கு கழிவு நீர் குளம் போல  தேங்கி நிற்கிறது. இதனைக் கண்டித்து அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தை முற்றுகையிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் கழிவுநீர்  பிரச்சனையை உடனடி யாக சரி செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.  ஊருக்குள் கழிவு நீர் தேங்கியுள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது எனவும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினர். மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற் போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இப்பிரச்சனைக்கு உரிய  தீர்வு எட்டப்படும் வரை தொடர் போராட்டங் களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரி வித்தனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலு வலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.