திருப்பூர், ஏப்.29- திருப்பூரில் தார் சாலை அமைக் கும் பணியை இரண்டு மாத காலமாக நிறுத்தி வைத்துள்ளதால் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி பொது மக்கள் மண்டல அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட 59 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பூந்தோட்டம், வள்ளலார் அவன்யூ உள்ளிட்ட பல்வேறு குடி யிருப்புகளில் 100க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்ற னர். முத்தனம் பாளையம் - விஜயாபு ரம் இணைப்பு சாலை போடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக டெண்டர் விடப்பட்ட நிலையிலும், இன்னும் பணிகள் தொடங்கப்பட வில்லை. இதனால் பள்ளி, கல்லூ ரிக்கு செல்லும் மாணவ மாணவியர் கள், பணிக்கு செல்லும் பொதுமக்கள் என ஏராளமானார் சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ள நிலையில் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட மிகப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக காலம் தாழ்த்தாமல் தார் சாலை அமைக் கும் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி நல்லூரில் அமைந் துள்ள திருப்பூர் மாநகராட்சி மூன்றா வது மண்டலத்தை அப்பகுதியைச் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு மண்டல அலுவல கத்தை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி, உடனடியாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்க ஒப்பந்ததாரருக்கு அறிவு றுத்தப்படும் என உறுதி அளித்த னர். இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.