districts

img

கட்டணம் செலுத்தியும் குடிநீர் இணைப்பு வழங்காததால் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அவிநாசி, டிச.8- ஓராண்டாக குடிநீர் கட்டணம் செலுத்தி யும், குடிநீர் இணைப்பு வழங்காததால் ஆத்தி ரமடைந்த பொதுமக்கள் வெள்ளியன்று தெக் கலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி அருகே தெக்கலூர் ஊராட்சி யில் 15 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் வசித்து  வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி நிர்வா கம் இப்பகுதியில் முறையாக சாலை வசதி, சாக்கடை  வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தராமல் கிடப்பில் போட்டுள்ள தாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  இது குறித்து பொதுமக்கள் கூறியதா வது, சென்னிமலைபாளையம் பகுதியில் சாக் கடை கால்வாய் அமைத்து, மூடுகல் அமைக் காமல் உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வா கத்திடம் முறையிட்டும் முறையாக பதில் அளிக்கப்படவில்லை. ஆதி திராவிடர் காலனி  அருகே நீண்ட நாளாக சாக்கடை கழிவு நீர்  சாலையில் சொல்வதால் அருகே உள்ள பள்ளி குழந்தைகள் உள்ளிட்டோர் அவதிக் குள்ளாகி வருகின்றனர். அதேபோல செங்கா ளிபாளையம் பகுதியில் திட்டமிட்டபடி முறை யாக சாக்கடை குழாய் அமைக்கவில்லை. மேலும் சென்னிமலை பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி முதல் சூரியபாளையம் வரை  குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள், நீண்ட நாட்களாக போடாமல் உள் ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெள் ளாண்டி பாளையத்தில் மூன்று சாலை சந் திப்பில் பாலம் இடிந்துள்ளது குறித்தி தகவல்  அளித்து  பல நாட்களாகியும், இதுவரை எவ் வித நடவடிக்கை எடுக்கவில்லை. 2021 ஆம் ஆண்டில் குடிநீர் இணைப்புக்காக பணம் செலுத்தப்பட்டது. மேலும்  ஓராண்டாக குடி நீர் கட்டணம் செலுத்தியும், இது வரை குடிநீர்  இணைப்பு வழங்கப்படவில்லை. இது போன்று அடிப்படை வசதிகள் எதுவும் முறை யாக செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டாலும் முறை யாக பதிலளிப்பது இல்லை என்று பொதுமக் கள் குற்றம்சாட்டுகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  அவிநாசி போலீசார் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்ற னர்.