எடப்பாடி தொகுதியிலும் பிரச்சனைகள் தீர்க்கப்படும்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கோவை, செப்.1- எடப்பாடி தொகுதியாக இருந் தாலும் அங்குள்ள பிரச்சனைகள் குறித்த சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் உறுதியளித்துள் ளார். திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் பேத்தியும், திமுக மாநில இளை ஞரணி இணைச்செயலாளருமான பைந்தமிழ்பாரி - கீதா தம்பதியின் மகளுமான ஸ்ரீநிதிக்கும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான மதியழகன் - விஜயா தம்பதியின் மகனுமான கெளசிக் தேவ் ஆகி யோரது திருமண விழா கோவை கொடிசியா அரங்கில் வியாழ னன்று நடைபெற்றது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத் தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இது ஒரு சீர்திருத்த திருமணமாக, சுய மரியாதை உணர்வோடு நடை பெற்றது. இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967 முன்பு சட்ட உரிமையில்லை. அண்ணா தலை மையில் ஆட்சி அமைந்தவுடன் சீர் திருத்த திருமணத்தை சட்ட அங்கீ காரமாக்கி முறைப்படி செல்லுபடி யாகும் என்று கொண்டு வந்தார். மேலும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்த போது பெறப்பட்ட மனுக்கள் ஆட்சிக்கு வந்த 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதியளித்தோம். இதற்காக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அப்படி பெறப்பட்ட மனுக்களில் 70 சதவி கிதம் நிறைவேற்றப்பட்டது. இதற் காக தனியாக கண்காணிப்பு மையம் வைத்து செயல்படுத்து கின்றோம். 10 வருடங்களாக நடக் காத வேலை 10 நாட்களில் முடிந்து விட்டதாக பயனடைந்தவர் பூரிப் போடு சொல்கின்றனர். எந்த பாகு பாடுமின்றி 234 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அது எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் பிரச் சனை தீர்க்கப்படும்.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவில் உயிரி ழப்பில் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். ஒப்புக்காக ஒரு கமிசன் அமைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. திமுக ஆட்சி அமைத் தால் முறையாக விசாரித்து அறிக்கை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தோம். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை கொடுக் கப்பட்டது. அதில், பல பிரச்சனை கள் உள்ளது. அதனை சட்டமன் றத்தில் வைத்து விவாதித்து அதை நிறைவேற்றுவோம். தூத்துக்குடி சம்பவம் தொடர்பான அறிக்கை யும் வந்திருக்கின்றது. அதையும் சட்டமன்றத்தில் வைக்க இருக் கின்றோம். தொடர்ந்து தேர்தல் வாக்கு றுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். பெண்களுக்கு இலவச பேருந்து, பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக் குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படித்த மாணவி களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. பெண்களுக்கு 1000 ரூபாய் உரி மைத்தொகை நிதி நிலைமை சரி யானவுடன் வழங்கப்படும், என் றார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு, வி.செந்தில்பாலாஜி, ஆர். காந்தி, சா.மு.நாசர், மு.பெ.சாமி நாதன், கா.ராமச்சந்திரன், கயல் விழி செல்வராஜ், டிஜிபி சைலேந் திரபாபு, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பெண் யானை உயிரிழப்பு
உதகை, செப்.1- கூடலூர் வன கோட்டத் தில் பெண் யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். கேரள வன பகுதியி லிருந்து நீலகிரி மாவட்டம், கூடலூர் வன கோட்டத்தில் உள்ள சேரம்பாடி வனசரகம் வென்ட்வொர்த் எஸ்டேட், கோரஞ்சால் பகுதிக்கு 2 வாரங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று வந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த் தனர். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட 25 வயது மதிக்கதக்க பெண் யானை என்பது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறை யினர் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத் துவர் ராஜேஷ்குமாரை வர வழைத்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதில் குணமாகவே அந்த யானை மீண்டும் கேரள வனப்பகுதிக்குள் சென்றது. இதன்பின் மீண்டும் உடல் நிலை மோசமடைந்த யானை சேரம்பாடி வனச்சரக பகுதிக்கு வந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் யானை க்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத் துவக்குழுவினர் யானை உடலை பிரேத பரிசோ தனை செய்தனர்.
மாணவர்களுக்கு பேச்சு போட்டி
ந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி நாமக்கல் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப் டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் மோகனூர் சாலையிலுள்ள அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி (தெற்கு) கலையரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர் களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயி ரமும் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாக பேச்சுப்போட்டியில் பங்கேற் கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“என் குப்பை எனது பொறுப்பு” சாமளாபுரம் பேரூராட்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு
திருப்பூர், செப். 1- திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருகம்பாளையம் அருகே உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் “நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம்” திட்டத்தின் சார்பில் “என் குப்பை எனது பொறுப்பு” என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத் தலை வர் விநாயகா பழனிச்சாமி தலைமை ஏற்று குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்த குமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 13ஆவது வார்டு கவுன்சிலர் பெரியசாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 14 ஆவது வார்டு கவுன்சிலர் துளசிமணி மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்க ளிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கிய லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பொது மக்க ளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
முன்னாள் படை வீரர்களுக்கு தொழிற் பயிற்சி
முன்னாள் படை வீரர்களுக்கு தொழிற் பயிற்சி திருப்பூர், செப். 1 - முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு வேலைவாய்ப்பை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தொழிற்பயிற்சிகள் வழங் கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கூறியுள் ளார். கைபேசி பழுது நீக்குதல், கார் மெக்கானிக், ஏசி, குளிர் சாதனப்பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிளம்பிங், ஓட்டுநர் பயற்சி, மின்சாரத்தால் இயங்கும் சீருந்துகள் பராமரித்தல் மற் றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல், பழுது பார்த்தல், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், பராமரித்தல் மற்றும் பேட்டரி சார்ஜ் செய்வ தற்கான நிலையம் அமைத்து பராமரித்தல், தமிழ் மற்றும் ஆங் கிலம் தட்டச்சு, கணினி - தட்டச்சு பயிற்சி மற்றும் மென்பொருள் பழுது பார்த்தல் ஆகிய பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக தொலைபேசி எண்.0421-2971127 மூலம் தொடர்பு கொள்ள லாம்.
பொருளாதார மேம்பாட்டுக் கழக கடன் மூலம் ஆயத்தஆடை தொழில்
திருப்பூர், செப். 1 - பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் கடன் பெற்று ஆயத்த ஆடை உற்பத்தி குழுமம் உருவாக்கலாம். திருப்பூ ரில் பின்னலாடை உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. வங்கி கடன், அரசு மானியங்களுடன் குறு, சிறு அளவில் ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலில் கால் பதிப்போர், தங்கள் நிறுவனத்தை படிப்படியாக அடுத்தடுத்த வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்கின்றனர். அவ்வகையில், திருப்பூர் மாவட் டத்தை சேர்ந்தோர், பொருளாதார மேம்பாட்டு கழகத்தில் கடன் பெற்று, ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் கால்பதிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளா தார மேம்பாட்டுக்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, குழு வாக இணைந்து ஆடை உற்பத்தி மையங்கள் அமைக்க கடன் வழங்கப்படுகிறது. ஆயத்த ஆடை உற்பத்தி குழு மங்கள் அமைக்க, தையல் தொழிலுக்கு தேவையான உபகர ணங்கள், குழுமம் சிறப்பாக செயல்பட தேவையான செலவி னங்களுக்கு என, ஒரு குழுமத்துக்கு அதிக பட்சம் மூன்று லட் சம் ரூபாய் கடன் வழங்கப்படும். ஒரு ஆயத்த ஆடை உற்பத்தி குழுமத்தில், குறைந்த பட்சம் 10 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். குழுவில் உள்ள அனைவருக்கும் தையல் தொழில் தெரிந்திருப்பது அவசியம். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் பயிற்சிபெற்றோர் உள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சீர் மரபினராக இருக்கவேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளில் ஆண்டு வருவாய், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் உள்ள குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆடை உற்பத்தி குழுமம் அமைக்க விரும் புவோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத் தில், விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண் டும்.இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, 0421 2999130 என் கிற எண்ணிலும், dbcwotpr@gmail.com என்கிற இ மெயி லில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது.
கொப்பரை கொள்முதல் மையங்கள் திறப்பு
திருப்பூர், செப். 1- திருப்பூர் மாவட்டத்தில் சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு அரசு கொள்முதல் மையங்கள் மூலம் மீண் டும் கொப்பரை கொள்முதல் தொடங்கி யதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங் கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடை பெற்று வருகிறது. இங்குள்ள விவசாயி கள் தேங்காய், இளநீர் மட்டுமல்லா மல் கொப்பரை உற்பத்தியின் மூலமும் வருவாய் ஈட்டி வருகின்றனர். சமீபகால மாக தேங்காய் மற்றும் கொப்ப ரைக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைவதைத் தவிர்க்க ஒன்றிய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (நேபெட்) மூலம் கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் மையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. அந்தவகையில் திருப் பூர் மாவட்டத்தில் உடுமலை, காங்கே யம், பெதப்பம்பட்டி, பொங்கலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் அரசு கொள்முதல் மையங்கள் அமைக் கப்பட்டு ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை ஒரு கிலோ ரூ.110-க்கும் கொள்முதல் செய் யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங் கிய கொப்பரை கொள்முதல் கடந்த மாத இறுதி வரை நடைபெற்றது. வெளிச் சந்தையில் கொப்பரை விலை கிலோ வுக்கு ரூ.80 என்ற அளவில் குறைந்த நிலையில் கொள்முதல் மையங்கள் விவசாயிகளுக்கு பெருமளவு கைகொ டுத்தது. எனவே நிறுத்தப்பட்ட கொப் பரை கொள்முதலை மீண்டும் தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைய டுத்து சுமார் ஒரு மாதமாக நிறுத்தப் பட்ட கொப்பரை கொள்முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. கொப்பரை கொள்முதல் செப்டம்பர் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர். கொப்பரை கொள்முதலில் பழைய நடைமுறையே தொடரும். எனவே தகுதி உடைய விவசாயிகள் போட்டோ, ஆதார் நகல், வங்கி கணக்குப்புத்தக நகல், உரிமை சான்று, அடங்கல், சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அனுகி முன் பதிவு செய்து கொள்ள லாம் இவ்வாறு அவர்கள் கூறினர். கொப்பரைக்கு கிலோவுக்கு ரூ.150, தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்தல், ஒரு ஏக்கருக்கான கொப்பரை கொள்முதல் அளவை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என விவ சாயிகள் கூறினர்.
கல் குவாரியை எதிர்த்து விவசாயி மூன்றாவது நாள் உண்ணாவிரதம்
திருப்பூர், செப். 1 - பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் முறைகேடாக இயங்கும் கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவ சாயி மூன்றாவது நாள் உண் ணாவிரதம் மேற்கொண் டார். கோடாங்கிபாளையம் பகுதியில் கல் குவாரி சுமார் 300 அடி ஆழம் வரை தோண் டப்பட்டு உள்ளது. அங்கு வெடி வைத்து பூமியை தகர்ப்பதால் இப்பகுதியில் உள்ள கட்டிடங்கள், வீடுக ளில் விரிசல் ஏற்பட்டு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள் ளது. அன்றாடம் இப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன், அவதிப்படும் நிலை உள் ளது. எனவே முறைகேடாக, விதிமீறலில் ஈடுபடும் தனி யார் கல் குவாரி மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி விஜயகுமார் என்ப வர் தனது சொந்த நிலத்தில் உண்ணாவிரதம் மேற் கொண்டு வருகிறார். மூன்றா வது நாளாக வியாழக்கி ழமை நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தின் போது பல்லடம் எம்எல்ஏ எம். எஸ்.எம்.ஆனந்தன் நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை:
நீர்மட்டம்:50.73/60அடி நீர்வரத்து:1140கன அடி வெளியேற்றம்:1100கனஅடி மழையளவு:17மிமீ
அமராவதி அணை:
நீர்மட்டம்: 87.41/90அடி.நீர்வரத்து:2671கனஅடி வெளியேற்றம்:2940கனஅடி மழையளவு:8மிமீ
குழந்தைகள், பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்
திருப்பூர், செப். 1 - தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடு திகள் ஒழுங்கு முறைச் சட்டம் 2014 இன் படி, பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக பாதுகாப்புத் துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய வற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தை கள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகள் உரி மம் பெற, மாவட்ட சமூகநல அலுவலகத்திலும் (அறை எண் : 35, 36), 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார், பள்ளிகள் மற்றும் கல்லூரி களில் செயல்படும் விடுதிகளை, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலகத்திலும் (அறை எண்: 630), மனநலம் பாதிக் கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலகத்திலும் (அறை எண் : 23), பதிவு செய்ய அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார். பதிவு செய்யாத விடுதிகளின் உரிமை யாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நடக்க இருப்பவை
75 ஆவது சுதந்திர தின பவள விழா கருத்தரங்கம் நாள்: வெள்ளிக்கிழமை நேரம்: பிற்பகல் 3.00 மணி இடம்: மெயின் தொலைபேசி நிலையம், திருப்பூர். ஏற்பாடு: பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஓய்வூதியர் சங்கம் & ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திருப்பூர் கிளைகள். கருத்துரை: விடுதலைப் போரில் வீழ்ந்த மலர்கள் அ.நிசார் அகமது, (முன்னாள் மாநிலச் செயலாளர் (டிஎன்ஜிஇஏ). எம்.கிரிஜா, அகில இந்திய இணைச் செயலாளர் (ஏஐஐஇஏ).
சுங்க சாவடி கட்டணம் உயர்வு - வாகன ஓட்டிகள் அவதி
தருமபுரி, செப்.1- தருமபுரி மாவட்டத்திலுள்ள பாளையம் சுங்க சாவடி புதிய கட்டணம் உயர்வால் பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் முக்கிய வழித்தடமாக தருமபுரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை (எண்.44) தான் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை யின் வழியாக நாள் ஒன்றுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பாளையம் புதூர் பகுதியில் அமைக்கப்பட் டுள்ள சுங்க சாவடியை கடந்து செல்கின்றன. புதன் கிழமை நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கார் ஒன்றுக்கு ஒரு முறை பயணம் செய்வதற்கு முன்பு ரூ.105 இருந்த கட்டணம், தற்போதுரூ.120, இலகு ரக வணிக மோட் டார் வாகனங்களுக்கு 185 ரூபாயில் இருந்து 210 ரூபாயகவும், கனரக வாகனங்களுக்கு ரூ.365 இருந்து ரூ.420 ஆகவும் உயர்ந்துள்ளது. பல அச்சு பொருந்திய வாகனங்களுக்கு ரூ.590 இருந்து ரூ.675 உயர்ந்துள்ளது. தற்போது கட்டணம் ரூ.15 முதல் ரூ.85 வரை கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வால் சரக்கு வாகன உரிமையாளர்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சட்டவிரோத மது விற்பனை - ஒருவர் கைது
உதகை, செப்.1- நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே உள்ள ஆச்சாக்கரை பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக கர்நாடக மாநில மது வகை களை விற்பனை நடைபெற்று வந்தது. இதனையடுத்து மசின குடி காவல் துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த ஜான் ஜோசப் (40) என்பவர் மதுவகைகளை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆய்வாளர் திருமலைராஜன் உத்தரவின் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஈரோடு: இலவச டேலி பயிற்சி
ஈரோடு, செப்.1- ஈரோடு, கொல்லம்பாளையம் புறவழிச்சாலையில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் இலவசமாக டேலி பயிற்சி அளிக்கப்படுகிறது. செப்.7 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் உணவு, சீருடை இலவசம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தின் கிராம ஊராட்சிகளைச் சேரந்த 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இப்பயிற் சியில் சேர தகுதியானவர்கள். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்திலிருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்கலாம். மேலும் விபரங்க ளுக்கு 8778323213, 7200650604, 0424 2400338 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை., தரவரிசை பட்டியல் 7 ஆம் தேதி வெளியீடு
கோவை, செப்.1- இளம் அறிவியல் பாடத்திற்கான தர வரிசை பட்டியல் வரும் செப்.7 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள், 14 அரசு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூ ரிகளில் வழங்கப்படுகிறது. இதற்கு 2022 – 23 ஆம் கல்வியாண்டில் இளமறி வியல் பாடப்பிரிவுகளுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. நடப்பாண்டில், வேளாண் பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளில் 2 ஆயி ரத்து 148 இடங்களும், இணைப்பு கல்லூ ரிகளில் 2 ஆயிரத்து 337 இடங்களும் உள்ளன. இதற்கு மொத்தம் 37 ஆயி ரத்து 766 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 800 பேர் ஆவர். மேலும், மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த செவ்வா யன்று வெளியிடப்படும் என தெரிவிக் கப்பட்டது. ஆனால், மருத்துவ கவுன்சிலிங் உள் ளிட்ட நடவடிக்கை காரணமாக தற் போது தரவரிசை பட்டியல் வெளியீடு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் செப்.7 ஆம் தேதி மாணவர்களுக்கான தரவரிசை பட்டி யல் வெளியிடப்படும் என பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இதற்கான நடவடிக்கைகள் தீவிர மாக எடுக்கப்பட்டு வருவதாக பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளர். தரவரிசை பட் டியல் வெளியிட்ட பிறகு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) முதல் சிறப்பு பிரிவு மாண வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறன் மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு உள் ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஏற் கனவே தகவல்கள் அளிக்கப்பட்டுள் ளது. மேலும், நடப்பாண்டில் இணைய தளம் மூலம் கலந்தாய்வு நடத்த வாய்ப்பு இல்லை எனவும், நேரடி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும் பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
தாயை பிரிந்த குட்டியானை 3 நாட்களுக்கு பின் இணைந்தது
உதகை, செப்.1- முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஆற்றை கடந்த போது யானை கூட்டத்திலிருந்து அடித்து வரப்பட்ட குட்டியானை 3 நாள் போராட்டத்துக்கு பின்னர் தாய் யானையுடன் சேர்க்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலி கள் காப்பகம், மாவனல்லா அருகே கடந்த ஆக.29 ஆம் தேதியன்று சீகூர் ஹள்ளா யானைக்கூட்டம் ஆற்றை கடந்தது. அப்போது யானை கூட் டத்திலிருந்து அடித்து வரப்பட்ட பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குட்டி யானையை வனத்துறையி னர் மீட்டு அதனை தாய் யானையு டன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக வனத்துறையி னர் பல குழுக்களாக பிரிந்து தாய் யானையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக 2 டிரோன் கேமராக்கள் வரவழைக் கப்பட்டு யானை கூட்டங்கள் கண் காணிக்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த யானை கூட்டத்திற்கு அரு கில் குட்டியானையை கொண்டு சென்று விட்டுவிட்டு வனத்துறையி னர் காத்திருந்தனர். ஆனால், அந்த யானை கூட்டம் குட்டியாளையை சேர்த்து கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து வாழைத்தோட்டம் பகு திக்கு குட்டி யானையை திரும்ப அழைத்து வந்தனர். குட்டியா னையை வன கால்நடை மருத்து வர்கள் 2 பேர் தொடர்ந்து கண்கா ணித்து வந்தனர். இந்நிலையில், முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமை யில், துணை இயக்குநர் அருண் மேற் பார்வையில் 3 ஆவது நாளாக குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடு பட்டனர். அப்போது காங்கிரஸ் மட் டம் வனப்பகுதியில் யானை கூட் டத்திலிருந்த தாய் யாளையுடன் குட் டியை சேர்த்தனர். தாய் யானை தனது கூட்டத்துடன் சேர்ந்து குட்டி யாளையை வனத்திற்குள் அழைத் துச் சென்றது. இதனால் வனத்துறை யினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலத்தில் அதிவிரைவு படை
சேலம், செப்.1- சேலம் மாநகரத்தில் அதி விரைவு படைக்கான வாக னம், உடைகள், துப்பாக்கி, ஒலிபெருக்கி, கையெறி குண் டுகள், தீயணைப்பான், முக கவசங்கள் மற்றும் டிரைபேடு கேமரா, ட்ரோன் கேமராவும் அறிமுகம் செய்து அதன் செயல்பாடுகளை சேலம் மாநகர காவல் ஆணையா ளர் நஜ்மல்ஹோதா பார்வை யிட்டு துவக்கி வைத்தார்.