திருப்பூர், நவ.29 - தீரன் சின்னமலை பெயரில் கல்லூரி அமைக்க இடம் வாங்கப்பட்டும், அதிமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்ப டவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற தும் உடனடியாக அனுமதி வழங்கப் பட்டு கல்லூரி திறக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.புதனன்று திருப்பூர் அருகே வஞ்சி பாளையத்தில் தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தபோது இதைக் கூறி னார். திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை வஞ்சிபாளையம் பகுதியில் கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் 28 ஏக்கர் பரப்பளவில் 2 தளங்களில் 26 வகுப்பறைகளுடன் தீரன் சின்னமலை மகளிர் கலை அறிவியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இதில், பி.காம், பி காம் (சிஏ), பிபிஏ., பிஎஸ்சி (கணினி அறிவியல்) பிஎஸ்சி (ஆடை வடிவமைப்பு) என ஐந்து பாடப்பிரி வுகள் உள்ளன. இக்கல்லூரி திறப்பு விழா மற்றும் சிபிஎஸ்சி பள்ளிக்கு அடிக் கல் நாட்டு விழா புதனன்று நடைபெற் றது. இதை சென்னை தலைமைச் செய லகத்தில் இருந்தவாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயி லாக திறந்து வைத்து, சிபிஎஸ்சி பள் ளிக்கும் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, காணொளி காட்சி வாயிலாக கூறியதாவது, தமிழக முதல்வர் கடந்த அதிமுக ஆட்சியின் போது கொங்கு வேளாளர் அறக்கட் டளை சார்பில் தீரன் சின்னமலை கலைக் கல்லூரி அமைக்க 28 ஏக்கர் நிலம் வாங் கப்பட்டும், அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. திமுக ஆட்சி பொறுப் பேற்ற பின்பு இது குறித்த தனது கவனத் திற்கு வந்தவுடனே அனுமதி வழங்கப் பட்டது. தீரன் சின்னமலையின் சுதந்திரப் போராட்டத்தையும், அவரது தியாகத் தையும் நாம் போற்ற வேண்டும். எட்டாக் கனியாக இருந்த கல்வி இன்று எல்லோ ருக்கும் கிடைக்க ஏராளமான போராட் டங்கள் நடைபெற்று வருகிறது. கல்வி வாய்ப்பை தமிழ்நாடு இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக மகளிர் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து, கல்லூரி வளா கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையா ளர் பவன்குமார் ஜி.கிரியப்பன்னவர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் ராம சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இவ்விழாவில் அறக் கட்டளை நிர்வாகிகள், மாணவர்கள் மற் றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.