திருப்பூர், மார்ச் 8 - பெண்கள் நலனுக்கு எதிரான மோடி ஆட்சியை வீழ்த்துவதே நமது முதன் மையான கடமை என்று திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க சர்வதேச மகளிர் தின சிறப்புக் கருத்த ரங்கில் உறுதி ஏற்கப்பட்டது. திருப்பூர் பி.ஆர்.நிலையத்தில் இந்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாநில பொருளாளர் ஜி.பிரமிளா வெறுப்பு அர சியலை வேரறுப்போம், பெண்கள் உரி மையை பாதுகாப்போம் என்ற தலைப் பில் கருத்துரையாற்றினார். மோடி ஆட்சிக்காலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள், பெண் குழந் தைகள் மீது நடைபெற்ற வன்முறை கள் குறித்து மக்களிடம், பெண்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். மோடி ஆட் சியை வீழ்த்த வேண்டும் என்று பிரமிளா கூறினார். முன்னதாக இந்த கருத்தரங் கத்திற்கு மாதர் சங்கத்தின் தெற்கு மாநகரத் தலைவர் எஸ்.பானுமதி தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய நிர்வாகி எம்.உஷா வரவேற்றார். மாவட் டச் செயலாளர் கே.சரஸ்வதி உரையாற் றினார். மாவட்டப் பொருளாளர் ஆர்.கவிதா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட் பட திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் பங் கேற்றனர். நிறைவாக தெற்கு மாநகர செயலாளர் டி .மினி நன்றி கூறினார்.